ETV Bharat / business

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை

author img

By

Published : Aug 19, 2020, 6:07 PM IST

மும்பை : இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ஏற்றத்தில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

Market Roundup
Market Roundup

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (ஆகஸ்ட் 18) வர்த்தகமானதைவிட சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமான இந்திய பங்குச் சந்தை கடைசி 30 நிமிடங்களில் சிறிது சரிவைச் சந்தித்தது.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் சென்செக்ஸ் 86.47 புள்ளிகள் (0.22 விழுக்காடு) அதிகரித்து, 38,614.79 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 23.05 புள்ளிகள் (0.20 விழுக்காடு) உயர்ந்து 11,408.40 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக டெக் மஹேந்திரா நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்து வர்த்தகமானது. அதேபோல பாரதி ஏர்டெல், மாருதி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

மறுபுறம் பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி, நெஸ்லே இந்தியா, ஹெச்.யூ.எல், கோட்டக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்று மட்டும் சுமார் 1,134.57 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.

சர்வதேச பங்குச்சந்தை

சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல் பங்குச்சந்தைகள் ஏற்றத்திலும், ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தை இறக்கத்திலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அதேபோல ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.66 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 45.15 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகனது.

இதையும் படிங்க: நெட்மெட்ஸ் நிறுவனத்தின் 620 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்!

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (ஆகஸ்ட் 18) வர்த்தகமானதைவிட சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமான இந்திய பங்குச் சந்தை கடைசி 30 நிமிடங்களில் சிறிது சரிவைச் சந்தித்தது.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் சென்செக்ஸ் 86.47 புள்ளிகள் (0.22 விழுக்காடு) அதிகரித்து, 38,614.79 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 23.05 புள்ளிகள் (0.20 விழுக்காடு) உயர்ந்து 11,408.40 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக டெக் மஹேந்திரா நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்து வர்த்தகமானது. அதேபோல பாரதி ஏர்டெல், மாருதி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

மறுபுறம் பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி, நெஸ்லே இந்தியா, ஹெச்.யூ.எல், கோட்டக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்று மட்டும் சுமார் 1,134.57 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.

சர்வதேச பங்குச்சந்தை

சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல் பங்குச்சந்தைகள் ஏற்றத்திலும், ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தை இறக்கத்திலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அதேபோல ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.66 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 45.15 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகனது.

இதையும் படிங்க: நெட்மெட்ஸ் நிறுவனத்தின் 620 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.