கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்குக் காலத்தில் வாரண்டி முடிவடையக் கூடிய தன் வாகனங்களுக்கான வாரண்டி காலத்தை நீட்டித்துள்ளதாக டாடா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் வணிகரீதியாக பயன்படுத்தப்பட்டு வரும் அந்நிறுவனத்தின் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் எனவும் டாடா மோட்டர்ஸ் அறிவித்துள்ளது.
மேலும் முன்னதாகவே அறிவித்து ஊரடங்கால் தடைபட்டுள்ள இலவச பழுதுபார்ப்பு சேவையையும் மேலும் இரண்டு மாதங்களுக்கு அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.
இதுதவிர இந்த ஊரடங்கு காலத்தில் காலவதியாகவிருந்த தன் வாடிக்கையாளர்களின் டாடா சுரக்ஷா வருடந்திரா பராமரிப்பு ஒப்பந்தத்தையும் அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.
இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் விலையை இப்பவாவது குறைங்க' - போக்குவரத்து சங்கம் கோரிக்கை