ETV Bharat / business

வீட்டுக் கடனை காப்பீடு செய்வது சரியான முடிவா?

author img

By

Published : Jun 28, 2020, 4:09 PM IST

நமது  கனவு வீட்டை வாங்குவதற்கு கடன் வாங்கும் நேரத்தில், நாம் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அதிக நேரம் செலவிடுகிறோம். வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம் போன்ற சிறிய விவரங்களிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் பெரும்பாலும் நமது கடனின் பாதுகாப்பு அம்சத்தை, அதாவது கடன் காப்பீடு அம்சத்தை புறக்கணிக்கிறோம். இவை குறித்து முன்னாள் வங்கியாளர் மற்றும் சில்லறைக் கடன்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் ஒன்பது ஆண்டுகள் அனுபவம் பெற்ற சித்தார்த் குப்தா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்...

home loan insurance
home loan insurance

எங்களது அனுபவத்தில், கடன் வாங்குபவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு கடன் காப்பீடு என்றால் என்ன, அது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது பற்றி முழுமையாகத் தெரியாது. இந்தக் கட்டுரையில், எங்களது அனுபவத்தின் மூலம் கடன் காப்பீட்டைப் பற்றிய வாடிக்கையாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்க முயற்சித்துள்ளேன்.

கடன் காப்பீடு என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

வீட்டுக் கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன். அக்கடன் வாங்கியவர் திரும்ப செலுத்தத் தவறினால், சொத்தை எடுத்துக் கொள்வதற்கு வங்கிக்கு உரிமை உண்டு. கடனைக் கட்ட முடியாமல் போனதற்கான காரணம் ஒரு பொருட்டல்ல. ஆகவே, குடும்பத்தின் முதன்மையாக சம்பாதிப்பவர் காலமாகி எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்கிக்கு சொத்தை கையகப்படுத்தவும், நிலுவையில் உள்ள கடன் தொகையை மீட்க அதை விற்கவும் முழு உரிமை உண்டு. இதுபோன்ற சூழ்நிலை ஒரு இயற்கைப் பேரழிவால் அல்லது இயற்கையின் செயலால் நடந்தாலும் கூட, குடும்பத்திற்கு எந்தவொரு சட்டபூர்வமான உதவியும் கிடைக்காது.

இருப்பினும், வீட்டுக் கடன் எடுக்கும் நேரத்தில், கடன் வாங்குபவர் கடன் காப்பீடு எடுப்பதைத் தேர்வு செய்யலாம். (முதன்மையாக சம்பாதிப்பவரின் பேரில்) கடன் காப்பீடு செய்யப்பட்டால், நிலுவையில் உள்ள கடன் தொகையை நேரடியாக வங்கியில் செலுத்துவதற்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்கும். இதனால் குடும்பத்திற்கு எந்தவிதமான நிதிச் சுமையும் கஷ்டங்களும் இல்லை என்பதை உறுதி செய்வதோடு மேலும் அவர்கள் தங்கள் கனவு வீட்டையும் தக்க வைத்திருக்க முடியும்.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

கடன் காப்பீடு வாங்குவது கட்டாயமா?

கடன் காப்பீட்டை வாங்குவது கட்டாயமில்லை. கடன் வாங்கும் நேரத்தில், வாங்குபவர் கடன் காப்பீடு வாங்குவதைத் தேர்வு செய்யலாம்.

கடன் காப்பீடு எவ்வாறு செயல்படுகிறது? நான் அதை எங்கிருந்து வாங்க முடியும்?

பெரும்பாலான கடன் வழங்குநர்கள் சில காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறார்கள். உங்கள் கடன் ஆலோசகர் அல்லது வங்கிக்கு உங்கள் தேவையை நீங்கள் தெரிவித்தால், அவர்கள் உங்களுக்கான கடன் காப்பீட்டை ஏற்பாடு செய்ய முடியும். காப்பீட்டிற்கான வருமான உறுதி சான்று ஒரு பிரச்சினையாக இருக்காது, ஏனென்றால் நீங்கள் கடனுக்கு தகுதியுடையவர் என்பதால் நீங்கள் காப்பீட்டுத் திட்டத்திற்கும் தகுதியுடையவர் என்பது அனுமானம்.

காப்பீட்டு நிறுவனம் உங்கள் வயது, கடன் தொகை, கடன் காலம் மற்றும் வருமான விவரங்கள் போன்ற விவரங்களை வங்கியில் இருந்து பெற்றுக் கொண்டு, செலுத்த வேண்டிய பிரீமியத்திற்கான விவரங்களை உங்களுக்கு வழங்கும். பெரும்பாலான வங்கிகள் ஒற்றை பிரீமியம் கடன் காப்பீட்டை வழங்குகின்றன, அதாவது முழு கடன்காலத்திற்கான முழு பிரீமியமும் முன்பணமாக செலுத்தப்படும். எனவே, நீங்கள் 20 வருடங்களுக்கு 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 20 ஆண்டுகளுக்கான முழு பிரீமியமும் காப்பீட்டு நிறுவனத்திற்கு முன்பணமாக செலுத்தப்படும்.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

ஒற்றை பிரீமியம் காப்பீடுகள் என்பது பெரிய முன்பண கட்டணத்தை உள்ளடக்கியது. என்னிடம் அந்தளவு பணப்புழக்கம் இல்லையென்றால் என்ன செய்வது?

வங்கிகளுக்கு வழக்கமாக காப்பீட்டு பிரீமியத்திற்கும் நிதியளிக்கும் வசதி உள்ளது. நீங்கள் 20 வருடங்களுக்கு 50 லட்சம் கடனை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றும் கடனுக்கான காப்பீடு செய்யும் பிரீமியம் தொகை இரண்டு லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில், உங்கள் கடன் காப்பீட்டின் பிரீமியத்தையும் சேர்த்து, அதாவது உங்கள் வீட்டை வாங்குவதற்கு 50 லட்சம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு இரண்டு லட்சம், மொத்தம் 52 லட்சம் ரூபாய் கடனை வங்கி வழங்கும். நீங்கள் இப்போது 50 லட்சத்திற்கு பதிலாக 52 லட்சத்திற்கு மாதாந்திரத் தவணை கட்ட வேண்டும். இந்த வழியில், காப்பீட்டுத் தொகையான இரண்டு லட்சத்தை முன்பணமாக செலுத்துவதற்கு பதிலாக, நீங்கள் இப்போது மாதந்திரத் தவணையை அதிகரிப்பதன் மூலம் மாதாமாதம் கட்டுவீர்கள். நிச்சயமாக, இது கூடுதல் வட்டி செலவைக் கொண்டிருக்கும். ஆனால் அந்த வட்டி செலவு தவிர்க்க இயலாதது.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

எனது வீட்டுக் கடன் வாங்கும் நேரத்தில் நான் கடன் காப்பீடு எடுக்கவில்லை. இப்போது நான் அதை எவ்வாறு பெறுவது?

கடனைத் தொடங்கும் நேரத்தில் கடன் காப்பீடு வழக்கமாக எடுக்கப்படுகிறது. அனைத்து கடன் வழங்குநர்களும் அதன் பின்னர் கடன் காப்பீட்டை எடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் வங்கியை அணுகி அவர்கள் உங்கள் கடனை காப்பீடு செய்ய அனுமதிக்கிறார்களா? அவ்வாறு செய்தால், பிரீமியம் தொகைக்கு நிதியளிப்பார்களா? என்று பார்க்கலாம். ஒரு வேளை, அவர்கள் அத்தகைய ஏற்பாடு செய்யாவிட்டால், உங்கள் கடனை வேறு ஏதேனும் வங்கிக்கு மாற்றிக் கொண்டு கடன் பரிமாற்றத்தின்போது புதிய கடன் வழங்குநரிடம் கடன் காப்பீட்டைத் தேர்வு செய்யலாம்.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

கடன் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு வகையான காப்பீடுகள் என்னென்ன?

காப்பீட்டு நிறுவனங்கள் இரண்டு வகையான கடன் காப்பீடுகளை வழங்குகின்றன. ஒன்று குறைந்து வரும் காப்பீடு மற்றொன்று நிலையான காப்பீடு.

குறைக்கும் காப்பீட்டில், காலப்போக்கில் கவரேஜ் தொகை (உறுதி செய்யப்பட்ட தொகை) குறைகிறது. கடன் காப்பீட்டை எடுக்கும் நேரத்தில், ஒவ்வொரு மாதமும் உறுதி செய்யப்பட்ட தொகை குறையும் விதத்தில் ஒரு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இந்த அட்டவணை உங்கள் கடனின் கடன் தொகுப்பு அட்டவணையில், ஒவ்வொரு மாதமும் கடனில் நிலுவையில் உள்ள அசல் தொகை குறைவதை, போன்று உறுதிப்படுத்தப்பட்ட தொகையும் குறைகிறது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட தொகை எந்த நேரத்திலும் நிலுவையில் உள்ள கடனுக்கு சமமாக இருக்கும்.

உதாரணமாக, திரு A, 35 வயதான ஒரு மனிதர் 50 லட்சம் கடனை 20 ஆண்டுகளுக்கு @ 8% எடுத்துக்கொள்கிறார். 20 வருடங்களுக்கு 50 லட்சம் குறைந்து வரும் கடன் காப்பீட்டை எடுக்கவும் அவர் முடிவு செய்கிறார். இப்போது, ​​5 ஆண்டுகளுக்குப் பிறகு (60 மாதங்கள்), திரு. A இறந்துவிட்டால், அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள கடன் தொகை 43.76 லட்சம் ரூபாயாக இருக்கும் (வட்டி விகித மாற்றங்கள் மற்றும் பகுதி முன்கூட்டியே செலுத்துதல் இல்லை என்று கருதுவோம்). காப்பீட்டு நிறுவனம் வகுத்துள்ள அட்டவணையின்படி, உறுதிப்படுத்தப்பட்ட தொகை 43.76 லட்சம் ரூபாயாக இருக்கும். காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வங்கிக்கு செலுத்தி கடன் முடிக்கப்படும்.

நிலையான காப்பீட்டில், காப்பீட்டின் காலம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொகை மாறாமல் இருக்கும். காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்து விட்டால், காப்பீட்டு நிறுவனம் பின்வருமாறு பணம் செலுத்துகிறது:

  • நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு சமமான தொகையை வங்கிக்கு செலுத்தும்
  • இறந்தவரால் நியமனம் செய்யப்பட்டவருக்கு வங்கிக்கு செலுத்திய பின் மீதமுள்ள தொகை வழங்கப்படும்

மேற்கண்ட உதாரணத்தின் மூலம், திரு A, 20 வருடங்களுக்கு 50 லட்சம் நிலையான காப்பீடு ஒன்றைத் தேர்ந்தெடுத்திருந்தால், கடன் பாக்கி தொகையைப் கருதாமல், அவரது உறுதித்தொகை 50 லட்சமாக இருக்கும்,. இப்போது, ​​ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திரு. A இறந்துவிட்டால், அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள கடன் 43.76 லட்சம் என்றால், காப்பீட்டு நிறுவனம் 43.76 லட்சம் வங்கிக்கும், மீதமுள்ள 6.24 லட்சம் ரூபாயை திரு. Aவால் நியமனம் செய்யப்பட்டவருக்கும் வழங்கும்

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

எனக்கு ஏற்கனவே ஆயுள் காப்பீடு உள்ளது, மேலும் எனது கடனுக்கு முழுமையாக காப்பீடு தேவையில்லை. எனது கடனுக்கு பகுதி காப்பீடு பெற முடியுமா?

ஆம். உங்கள் கடனை நீங்கள் பகுதி காப்பீடும் செய்யலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு உறுதிப்படுத்தப்பட்ட தொகையை செலுத்தும். மீதமுள்ள கடன் தொகையை இணை விண்ணப்பதாரர்கள் / சட்ட வாரிசுகள் செலுத்த வேண்டும். மேற்கண்ட உதாரணத்தைத் தொடர்ந்து, திரு .A 50 லட்சத்திற்கு பதிலாக 30 லட்சம் நிலையான காப்பீட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மறைவுக்குப் பிறகு, காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு 30 லட்சம் செலுத்தும், மீதமுள்ள 13.76 லட்சத்தை திரு. Aவின் குடும்பத்தினர் செலுத்த வேண்டும்.

எனது கடனை முன்கூட்டியே முன்கூட்டியே அல்லது வேறு கடன் வழங்குபவருக்கு மாற்றினால் கடன் காப்பீட்டு என்ன ஆகும்?

இது நீங்கள் தேர்ந்தெடுத்த காப்பீட்டின் வகையைப் பொறுத்தது. இரண்டு விதமான சாத்தியக் கூறுகள் உள்ளன:

பாலிசியை ஒப்படைத்தல்: இந்த சூழ்நிலையில், உங்கள் கடனை முடிப்பதற்காக / மாற்றுவதற்காக நீங்கள் உங்கள் பாலிசியை ஒப்படைத்தால், காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு ஒப்படைப்பு மதிப்பைத் திருப்பித் தரும். ஒப்படைப்பு மதிப்பு என்பது பாலிசியின் நிலுவைத் தொகையைப் பொறுத்தது.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

பயனாளி / நியமிக்கப்பட்டவரின் மாற்றம்: சில கடன் காப்பீட்டுத் திட்டங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களை பாலிசியில் நியமிக்கப்பட்ட / பயனாளிகளாக மாற்றுவதற்கு உங்களை அனுமதிக்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கடன் முடிக்கப்பட்டால் / மாற்றப்பட்டால், காப்பீட்டாளர் தனது குடும்ப உறுப்பினரை பாலிசியின் பயனாளியாக பரிந்துரைக்க முடியும். காப்பீட்டாளரின் மறைவின் போது, ​​காப்பீட்டு நிறுவனம் உறுதி செய்யப்பட்ட தொகையை பயனாளிக்கு அளிக்கும்.

பொறுப்பு துறப்பு: மேலே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் முழுக்க முழுக்க ஆசிரியரின் கருத்துகளே, ஈடிவி பாரத் அல்லது அதன் நிர்வாகத்தின் கருத்துகள் அல்ல.

தனிப்பட்ட நிதி தொடர்பான ஏதேனும் கேள்விகள் உங்களுக்கு இருந்தால், அதற்கான நிபுணரின் பதில்களைப் பெற முயற்சிப்போம். முழுமையான விவரங்களுடன் businessdesk@etvbharat.com இல் எங்களை அணுகவும்.

இதையும் படிங்க: தனி நபர் நிதி நிர்வாகத்தில் தற்சார்பை உறுதி செய்வது எப்படி? சிறப்புக் கட்டுரை

எங்களது அனுபவத்தில், கடன் வாங்குபவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு கடன் காப்பீடு என்றால் என்ன, அது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது பற்றி முழுமையாகத் தெரியாது. இந்தக் கட்டுரையில், எங்களது அனுபவத்தின் மூலம் கடன் காப்பீட்டைப் பற்றிய வாடிக்கையாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்க முயற்சித்துள்ளேன்.

கடன் காப்பீடு என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

வீட்டுக் கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன். அக்கடன் வாங்கியவர் திரும்ப செலுத்தத் தவறினால், சொத்தை எடுத்துக் கொள்வதற்கு வங்கிக்கு உரிமை உண்டு. கடனைக் கட்ட முடியாமல் போனதற்கான காரணம் ஒரு பொருட்டல்ல. ஆகவே, குடும்பத்தின் முதன்மையாக சம்பாதிப்பவர் காலமாகி எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்கிக்கு சொத்தை கையகப்படுத்தவும், நிலுவையில் உள்ள கடன் தொகையை மீட்க அதை விற்கவும் முழு உரிமை உண்டு. இதுபோன்ற சூழ்நிலை ஒரு இயற்கைப் பேரழிவால் அல்லது இயற்கையின் செயலால் நடந்தாலும் கூட, குடும்பத்திற்கு எந்தவொரு சட்டபூர்வமான உதவியும் கிடைக்காது.

இருப்பினும், வீட்டுக் கடன் எடுக்கும் நேரத்தில், கடன் வாங்குபவர் கடன் காப்பீடு எடுப்பதைத் தேர்வு செய்யலாம். (முதன்மையாக சம்பாதிப்பவரின் பேரில்) கடன் காப்பீடு செய்யப்பட்டால், நிலுவையில் உள்ள கடன் தொகையை நேரடியாக வங்கியில் செலுத்துவதற்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்கும். இதனால் குடும்பத்திற்கு எந்தவிதமான நிதிச் சுமையும் கஷ்டங்களும் இல்லை என்பதை உறுதி செய்வதோடு மேலும் அவர்கள் தங்கள் கனவு வீட்டையும் தக்க வைத்திருக்க முடியும்.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

கடன் காப்பீடு வாங்குவது கட்டாயமா?

கடன் காப்பீட்டை வாங்குவது கட்டாயமில்லை. கடன் வாங்கும் நேரத்தில், வாங்குபவர் கடன் காப்பீடு வாங்குவதைத் தேர்வு செய்யலாம்.

கடன் காப்பீடு எவ்வாறு செயல்படுகிறது? நான் அதை எங்கிருந்து வாங்க முடியும்?

பெரும்பாலான கடன் வழங்குநர்கள் சில காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறார்கள். உங்கள் கடன் ஆலோசகர் அல்லது வங்கிக்கு உங்கள் தேவையை நீங்கள் தெரிவித்தால், அவர்கள் உங்களுக்கான கடன் காப்பீட்டை ஏற்பாடு செய்ய முடியும். காப்பீட்டிற்கான வருமான உறுதி சான்று ஒரு பிரச்சினையாக இருக்காது, ஏனென்றால் நீங்கள் கடனுக்கு தகுதியுடையவர் என்பதால் நீங்கள் காப்பீட்டுத் திட்டத்திற்கும் தகுதியுடையவர் என்பது அனுமானம்.

காப்பீட்டு நிறுவனம் உங்கள் வயது, கடன் தொகை, கடன் காலம் மற்றும் வருமான விவரங்கள் போன்ற விவரங்களை வங்கியில் இருந்து பெற்றுக் கொண்டு, செலுத்த வேண்டிய பிரீமியத்திற்கான விவரங்களை உங்களுக்கு வழங்கும். பெரும்பாலான வங்கிகள் ஒற்றை பிரீமியம் கடன் காப்பீட்டை வழங்குகின்றன, அதாவது முழு கடன்காலத்திற்கான முழு பிரீமியமும் முன்பணமாக செலுத்தப்படும். எனவே, நீங்கள் 20 வருடங்களுக்கு 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 20 ஆண்டுகளுக்கான முழு பிரீமியமும் காப்பீட்டு நிறுவனத்திற்கு முன்பணமாக செலுத்தப்படும்.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

ஒற்றை பிரீமியம் காப்பீடுகள் என்பது பெரிய முன்பண கட்டணத்தை உள்ளடக்கியது. என்னிடம் அந்தளவு பணப்புழக்கம் இல்லையென்றால் என்ன செய்வது?

வங்கிகளுக்கு வழக்கமாக காப்பீட்டு பிரீமியத்திற்கும் நிதியளிக்கும் வசதி உள்ளது. நீங்கள் 20 வருடங்களுக்கு 50 லட்சம் கடனை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றும் கடனுக்கான காப்பீடு செய்யும் பிரீமியம் தொகை இரண்டு லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில், உங்கள் கடன் காப்பீட்டின் பிரீமியத்தையும் சேர்த்து, அதாவது உங்கள் வீட்டை வாங்குவதற்கு 50 லட்சம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு இரண்டு லட்சம், மொத்தம் 52 லட்சம் ரூபாய் கடனை வங்கி வழங்கும். நீங்கள் இப்போது 50 லட்சத்திற்கு பதிலாக 52 லட்சத்திற்கு மாதாந்திரத் தவணை கட்ட வேண்டும். இந்த வழியில், காப்பீட்டுத் தொகையான இரண்டு லட்சத்தை முன்பணமாக செலுத்துவதற்கு பதிலாக, நீங்கள் இப்போது மாதந்திரத் தவணையை அதிகரிப்பதன் மூலம் மாதாமாதம் கட்டுவீர்கள். நிச்சயமாக, இது கூடுதல் வட்டி செலவைக் கொண்டிருக்கும். ஆனால் அந்த வட்டி செலவு தவிர்க்க இயலாதது.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

எனது வீட்டுக் கடன் வாங்கும் நேரத்தில் நான் கடன் காப்பீடு எடுக்கவில்லை. இப்போது நான் அதை எவ்வாறு பெறுவது?

கடனைத் தொடங்கும் நேரத்தில் கடன் காப்பீடு வழக்கமாக எடுக்கப்படுகிறது. அனைத்து கடன் வழங்குநர்களும் அதன் பின்னர் கடன் காப்பீட்டை எடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் வங்கியை அணுகி அவர்கள் உங்கள் கடனை காப்பீடு செய்ய அனுமதிக்கிறார்களா? அவ்வாறு செய்தால், பிரீமியம் தொகைக்கு நிதியளிப்பார்களா? என்று பார்க்கலாம். ஒரு வேளை, அவர்கள் அத்தகைய ஏற்பாடு செய்யாவிட்டால், உங்கள் கடனை வேறு ஏதேனும் வங்கிக்கு மாற்றிக் கொண்டு கடன் பரிமாற்றத்தின்போது புதிய கடன் வழங்குநரிடம் கடன் காப்பீட்டைத் தேர்வு செய்யலாம்.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

கடன் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு வகையான காப்பீடுகள் என்னென்ன?

காப்பீட்டு நிறுவனங்கள் இரண்டு வகையான கடன் காப்பீடுகளை வழங்குகின்றன. ஒன்று குறைந்து வரும் காப்பீடு மற்றொன்று நிலையான காப்பீடு.

குறைக்கும் காப்பீட்டில், காலப்போக்கில் கவரேஜ் தொகை (உறுதி செய்யப்பட்ட தொகை) குறைகிறது. கடன் காப்பீட்டை எடுக்கும் நேரத்தில், ஒவ்வொரு மாதமும் உறுதி செய்யப்பட்ட தொகை குறையும் விதத்தில் ஒரு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இந்த அட்டவணை உங்கள் கடனின் கடன் தொகுப்பு அட்டவணையில், ஒவ்வொரு மாதமும் கடனில் நிலுவையில் உள்ள அசல் தொகை குறைவதை, போன்று உறுதிப்படுத்தப்பட்ட தொகையும் குறைகிறது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட தொகை எந்த நேரத்திலும் நிலுவையில் உள்ள கடனுக்கு சமமாக இருக்கும்.

உதாரணமாக, திரு A, 35 வயதான ஒரு மனிதர் 50 லட்சம் கடனை 20 ஆண்டுகளுக்கு @ 8% எடுத்துக்கொள்கிறார். 20 வருடங்களுக்கு 50 லட்சம் குறைந்து வரும் கடன் காப்பீட்டை எடுக்கவும் அவர் முடிவு செய்கிறார். இப்போது, ​​5 ஆண்டுகளுக்குப் பிறகு (60 மாதங்கள்), திரு. A இறந்துவிட்டால், அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள கடன் தொகை 43.76 லட்சம் ரூபாயாக இருக்கும் (வட்டி விகித மாற்றங்கள் மற்றும் பகுதி முன்கூட்டியே செலுத்துதல் இல்லை என்று கருதுவோம்). காப்பீட்டு நிறுவனம் வகுத்துள்ள அட்டவணையின்படி, உறுதிப்படுத்தப்பட்ட தொகை 43.76 லட்சம் ரூபாயாக இருக்கும். காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வங்கிக்கு செலுத்தி கடன் முடிக்கப்படும்.

நிலையான காப்பீட்டில், காப்பீட்டின் காலம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொகை மாறாமல் இருக்கும். காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்து விட்டால், காப்பீட்டு நிறுவனம் பின்வருமாறு பணம் செலுத்துகிறது:

  • நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு சமமான தொகையை வங்கிக்கு செலுத்தும்
  • இறந்தவரால் நியமனம் செய்யப்பட்டவருக்கு வங்கிக்கு செலுத்திய பின் மீதமுள்ள தொகை வழங்கப்படும்

மேற்கண்ட உதாரணத்தின் மூலம், திரு A, 20 வருடங்களுக்கு 50 லட்சம் நிலையான காப்பீடு ஒன்றைத் தேர்ந்தெடுத்திருந்தால், கடன் பாக்கி தொகையைப் கருதாமல், அவரது உறுதித்தொகை 50 லட்சமாக இருக்கும்,. இப்போது, ​​ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திரு. A இறந்துவிட்டால், அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள கடன் 43.76 லட்சம் என்றால், காப்பீட்டு நிறுவனம் 43.76 லட்சம் வங்கிக்கும், மீதமுள்ள 6.24 லட்சம் ரூபாயை திரு. Aவால் நியமனம் செய்யப்பட்டவருக்கும் வழங்கும்

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

எனக்கு ஏற்கனவே ஆயுள் காப்பீடு உள்ளது, மேலும் எனது கடனுக்கு முழுமையாக காப்பீடு தேவையில்லை. எனது கடனுக்கு பகுதி காப்பீடு பெற முடியுமா?

ஆம். உங்கள் கடனை நீங்கள் பகுதி காப்பீடும் செய்யலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு உறுதிப்படுத்தப்பட்ட தொகையை செலுத்தும். மீதமுள்ள கடன் தொகையை இணை விண்ணப்பதாரர்கள் / சட்ட வாரிசுகள் செலுத்த வேண்டும். மேற்கண்ட உதாரணத்தைத் தொடர்ந்து, திரு .A 50 லட்சத்திற்கு பதிலாக 30 லட்சம் நிலையான காப்பீட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மறைவுக்குப் பிறகு, காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு 30 லட்சம் செலுத்தும், மீதமுள்ள 13.76 லட்சத்தை திரு. Aவின் குடும்பத்தினர் செலுத்த வேண்டும்.

எனது கடனை முன்கூட்டியே முன்கூட்டியே அல்லது வேறு கடன் வழங்குபவருக்கு மாற்றினால் கடன் காப்பீட்டு என்ன ஆகும்?

இது நீங்கள் தேர்ந்தெடுத்த காப்பீட்டின் வகையைப் பொறுத்தது. இரண்டு விதமான சாத்தியக் கூறுகள் உள்ளன:

பாலிசியை ஒப்படைத்தல்: இந்த சூழ்நிலையில், உங்கள் கடனை முடிப்பதற்காக / மாற்றுவதற்காக நீங்கள் உங்கள் பாலிசியை ஒப்படைத்தால், காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு ஒப்படைப்பு மதிப்பைத் திருப்பித் தரும். ஒப்படைப்பு மதிப்பு என்பது பாலிசியின் நிலுவைத் தொகையைப் பொறுத்தது.

home loan insurance
வீட்டுக் கடன் காப்பீடு

பயனாளி / நியமிக்கப்பட்டவரின் மாற்றம்: சில கடன் காப்பீட்டுத் திட்டங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களை பாலிசியில் நியமிக்கப்பட்ட / பயனாளிகளாக மாற்றுவதற்கு உங்களை அனுமதிக்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கடன் முடிக்கப்பட்டால் / மாற்றப்பட்டால், காப்பீட்டாளர் தனது குடும்ப உறுப்பினரை பாலிசியின் பயனாளியாக பரிந்துரைக்க முடியும். காப்பீட்டாளரின் மறைவின் போது, ​​காப்பீட்டு நிறுவனம் உறுதி செய்யப்பட்ட தொகையை பயனாளிக்கு அளிக்கும்.

பொறுப்பு துறப்பு: மேலே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் முழுக்க முழுக்க ஆசிரியரின் கருத்துகளே, ஈடிவி பாரத் அல்லது அதன் நிர்வாகத்தின் கருத்துகள் அல்ல.

தனிப்பட்ட நிதி தொடர்பான ஏதேனும் கேள்விகள் உங்களுக்கு இருந்தால், அதற்கான நிபுணரின் பதில்களைப் பெற முயற்சிப்போம். முழுமையான விவரங்களுடன் businessdesk@etvbharat.com இல் எங்களை அணுகவும்.

இதையும் படிங்க: தனி நபர் நிதி நிர்வாகத்தில் தற்சார்பை உறுதி செய்வது எப்படி? சிறப்புக் கட்டுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.