ETV Bharat / business

புது திட்டங்களை அறிவிக்க வேண்டாம் - மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: மத்திய அரசு இதுவரை அறிவித்த திட்டங்களைத் தாண்டி புதிதாக எந்தவொரு திட்டத்தையும் வேறு அமைச்சகங்கள் அறிவிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

author img

By

Published : Jun 5, 2020, 9:15 PM IST

Finance ministry
Finance ministry

கரோனா லாக்டவுன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், மத்திய அரசு தற்சார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கோடிக்கு நிதிச் சலுகையை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்காக பிரத்யேகமாக பிரதமர் கரீப் கல்யாண் திட்டம் என்ற பெயரில் நிதிச் சலுகை அளித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020-21ஆம் நிதியாண்டில் இதுவரை அறிவிக்கப்பட்ட, மேற்கண்ட திட்டங்கள் மற்றும் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைத் தவிர்த்து எந்தவித புது அறிவிப்புகளும் நடப்பாண்டில் செயல்படுத்தப்படாது.

எனவே, 2021 மார்ச் 31ஆம் தேதிவரை அமைச்சகங்கள் புதிய திட்ட அறிவிப்புகள் மேற்கொள்ளக்கூடாது என மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பிரதமர் மோடியின் தனி செயலருக்கு உலக வங்கியில் பணி"

கரோனா லாக்டவுன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், மத்திய அரசு தற்சார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கோடிக்கு நிதிச் சலுகையை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்காக பிரத்யேகமாக பிரதமர் கரீப் கல்யாண் திட்டம் என்ற பெயரில் நிதிச் சலுகை அளித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020-21ஆம் நிதியாண்டில் இதுவரை அறிவிக்கப்பட்ட, மேற்கண்ட திட்டங்கள் மற்றும் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைத் தவிர்த்து எந்தவித புது அறிவிப்புகளும் நடப்பாண்டில் செயல்படுத்தப்படாது.

எனவே, 2021 மார்ச் 31ஆம் தேதிவரை அமைச்சகங்கள் புதிய திட்ட அறிவிப்புகள் மேற்கொள்ளக்கூடாது என மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பிரதமர் மோடியின் தனி செயலருக்கு உலக வங்கியில் பணி"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.