ETV Bharat / business

உபர் சீருந்து சேவை 21 நாள்கள் நிறுத்திவைப்பு

author img

By

Published : Mar 25, 2020, 3:16 PM IST

Updated : Mar 25, 2020, 3:37 PM IST

டெல்லி: கரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் உபர் கேப் நிறுவனம் அதன் சேவையை 21 நாள்களுக்கு நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Uber India Suspends Cab Services
Uber India Suspends Cab Services

கரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு 21 நாள்களுக்கு வெளியேறக் கூடாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், பல நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கிவந்த சேவையை நிறுத்தியுள்ளன. இணைய சேவை நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் 'மக்கள் ஊரடங்கு' முடியும்வரை அதன் சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து உபர் கேப் சேவை நிறுவனமும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பதி, விஜயவாடா, டெல்லி, சென்னை, சூரத், ராஜ்கோட், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 75 நகரங்களில் அதன் சேவையை 21 நாள்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த 21 நாள்களுக்கு தினசரி 1,000 ரூபாய் ஓட்டுநர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதே மாதிரி ஓலா கேப் நிறுவனமும் அதன் சேவையை நிறுத்தியுள்ள நிலையில், நிறுவனங்களின் பணிபுரியும் ஓட்டுநர்களோ அல்லது அவர்களது குடும்பத்தில் யாராவதோ கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தால், அவர்களுக்கு 30,000 ரூபாய் வழங்குவதாக ஓலா கேப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சரிவிலிருந்து மீண்ட ரிலையன்ஸ் குழும பங்குகள்

கரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு 21 நாள்களுக்கு வெளியேறக் கூடாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், பல நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கிவந்த சேவையை நிறுத்தியுள்ளன. இணைய சேவை நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் 'மக்கள் ஊரடங்கு' முடியும்வரை அதன் சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து உபர் கேப் சேவை நிறுவனமும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பதி, விஜயவாடா, டெல்லி, சென்னை, சூரத், ராஜ்கோட், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 75 நகரங்களில் அதன் சேவையை 21 நாள்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த 21 நாள்களுக்கு தினசரி 1,000 ரூபாய் ஓட்டுநர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதே மாதிரி ஓலா கேப் நிறுவனமும் அதன் சேவையை நிறுத்தியுள்ள நிலையில், நிறுவனங்களின் பணிபுரியும் ஓட்டுநர்களோ அல்லது அவர்களது குடும்பத்தில் யாராவதோ கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தால், அவர்களுக்கு 30,000 ரூபாய் வழங்குவதாக ஓலா கேப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சரிவிலிருந்து மீண்ட ரிலையன்ஸ் குழும பங்குகள்

Last Updated : Mar 25, 2020, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.