ETV Bharat / briefs

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்: மூவர் கைது!

author img

By

Published : Sep 19, 2020, 9:17 PM IST

சென்னை: தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Three Person's Arrested For Cannabis Trafficking In Chennai
Three Person's Arrested For Cannabis Trafficking In Chennai

சென்னை, தியாகராயநகர் தாமஸ் சாலை அருகே தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இச்சோதனையின்போது, அவர்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (29), நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (30), மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31) என்பது தெரியவந்தது.

இவர்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா, 37 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், ஐந்து செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, தியாகராயநகர் தாமஸ் சாலை அருகே தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இச்சோதனையின்போது, அவர்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (29), நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (30), மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31) என்பது தெரியவந்தது.

இவர்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா, 37 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், ஐந்து செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.