திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடையை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா நெருக்கடி காலத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் பிரதமர் மத்திய அரசு சார்பில் அறிவித்துள்ள இலவச அரிசியானது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இலவச அரிசியை தமிழ்நாட்டில் பகிர்ந்தளிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் காமராஜ்
திருவாரூர்: மத்திய அரசு அறிவித்துள்ள இலவச அரிசியை தமிழ்நாட்டில் பகிர்ந்தளிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
![இலவச அரிசியை தமிழ்நாட்டில் பகிர்ந்தளிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் காமராஜ் இலவச அரிசியை தமிழ்நாட்டில் பகிர்ந்தளிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் காமராஜ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:46:48:1593692208-tn-tvr-06-ration-shops-open-food-minister-script-tn10029-02072020165422-0207f-1593689062-528.jpg?imwidth=3840)
இந்தியாவிலேயே அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை கடைப்பிடிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் இரண்டு கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் இந்த அரிசியை பகிர்ந்தளிக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை விலையில்லாமல் அரிசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகிறது. கரோனா நெருக்கடி காலத்தை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 3 மாதங்களாக இலவச அரிசியை வழங்கியது.
தற்போதும் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்க பிரதமர் அறிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அறிவிக்கப்பட்ட இந்த அரிசியை எவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்” என்றார்.
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடையை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா நெருக்கடி காலத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் பிரதமர் மத்திய அரசு சார்பில் அறிவித்துள்ள இலவச அரிசியானது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவிலேயே அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை கடைப்பிடிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் இரண்டு கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் இந்த அரிசியை பகிர்ந்தளிக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை விலையில்லாமல் அரிசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகிறது. கரோனா நெருக்கடி காலத்தை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 3 மாதங்களாக இலவச அரிசியை வழங்கியது.
தற்போதும் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்க பிரதமர் அறிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அறிவிக்கப்பட்ட இந்த அரிசியை எவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்” என்றார்.