ETV Bharat / briefs

ஊரடங்கு மீறல் அபராதம் வசூல் 10கோடியை தாண்டியது!

author img

By

Published : Jun 5, 2020, 7:38 PM IST

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 73 நாள்களில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டு அபராதமாக ரூ. 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயரத்து 599 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

Tamilnadu Police Curfew Fine Collection
Tamilnadu Police Curfew Fine Collection

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 73 நாள்களில் தடையை மீறியதாக 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேரை காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

அதேபோல், 4 லட்சத்து 48 ஆயிரத்து 456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரத்து 599 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 73 நாள்களில் தடையை மீறியதாக 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேரை காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

அதேபோல், 4 லட்சத்து 48 ஆயிரத்து 456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரத்து 599 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.