தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகள் மொத்தம் 19 பேருக்கு மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் வழங்கினார்.
இதில், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் அண்ணாமலை, புஸ்பராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.