ETV Bharat / briefs

ரத்தக்கரையுடன் களத்தில் இறுதிவரை போராடிய வாட்சன் - வாட்சன்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் தனது இடது காலில் ரத்தக்கரையுடன் ஆடிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

ரத்தக்கரையுடன் களத்தில் இறுதிவரை போராடிய வாட்சன்
author img

By

Published : May 14, 2019, 8:35 AM IST

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஐபிஎல் கிரிக்கெட்டின் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தாரைவார்த்தது.

150 இலக்குடன் ஆடிய சென்னை அணியில், ரெய்னா, தோனி, ராயுடு, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்கள் கையை விரித்தனர். இருப்பினும், இப்போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன், இறுதி ஓவர் வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். 59 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 80 ரன்கள் அடித்து, தனது பேட்டிங் குறித்து விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடித் தந்தார்.

Watson
ரத்தத்துடன் பவுண்டரியை விளாசிய வாட்சன்

இதனிடையே, இப்போட்டியில் வாட்சன் ரத்தக்காயத்துடன் ஆடிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவியது. இந்த புகைப்படம் குறித்து அவரது சக வீரர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வாட்சனின் காலில் ரத்தம் வருவதை கவனித்தீர்களா மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரன் ஓடும்போது, வாட்சன் டைவ் அடித்ததால் அவரது காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் சொல்லாமல் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். போட்டி முடிந்த பின்னர் அவரது காலில் ஏற்பட்ட காயத்திற்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

Harbhajjan Singh
ஹர்பஜன் சிங் பதிவு

ரத்தக்கரையுடன் வாட்சன் ஆடிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது. அதுமட்டுமின்றி, ரத்தக்கரையுடன் வாட்சன் வெளிப்படுத்திய போராட்ட குணத்தைக் கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமில்லாது மற்ற அணி ரசிகர்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஐபிஎல் கிரிக்கெட்டின் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தாரைவார்த்தது.

150 இலக்குடன் ஆடிய சென்னை அணியில், ரெய்னா, தோனி, ராயுடு, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்கள் கையை விரித்தனர். இருப்பினும், இப்போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன், இறுதி ஓவர் வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். 59 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 80 ரன்கள் அடித்து, தனது பேட்டிங் குறித்து விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடித் தந்தார்.

Watson
ரத்தத்துடன் பவுண்டரியை விளாசிய வாட்சன்

இதனிடையே, இப்போட்டியில் வாட்சன் ரத்தக்காயத்துடன் ஆடிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவியது. இந்த புகைப்படம் குறித்து அவரது சக வீரர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வாட்சனின் காலில் ரத்தம் வருவதை கவனித்தீர்களா மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரன் ஓடும்போது, வாட்சன் டைவ் அடித்ததால் அவரது காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் சொல்லாமல் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். போட்டி முடிந்த பின்னர் அவரது காலில் ஏற்பட்ட காயத்திற்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

Harbhajjan Singh
ஹர்பஜன் சிங் பதிவு

ரத்தக்கரையுடன் வாட்சன் ஆடிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது. அதுமட்டுமின்றி, ரத்தக்கரையுடன் வாட்சன் வெளிப்படுத்திய போராட்ட குணத்தைக் கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமில்லாது மற்ற அணி ரசிகர்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.



தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முத்தையாபுரம் பகுதிக்குட்பட்ட ஸ்பிக்நகர் அத்திமரப்பட்டியில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அவர், ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு. கழகத்தின் சார்பில் மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து அவர்கள் தொடர்ந்து தி.மு.கழக நிர்வாகிகளிடம் கூறி வருகிறார்கள். குறிப்பாக இப்பகுதியில் உள்ள பெட்டை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை நீர் கொள்ளளவு மிக குறைந்த அளவே பிடிக்கிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் மிக குறைவாகவே உள்ளது. இதனால் ஒரு போகம் மட்டுமே விவசாய பயிர்கள் விளைவதாகவும் விவசாயிகள் பொது மக்களிடத்தில் குறை கேட்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் நிறைவேற்றி தருவதாக கழகத் தலைவர் மு க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதுபோக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவும், வங்கியில் அடமானம் வைத்து உள்ள நகைகளை மீட்டுத்தரவும் உறுதியளித்திருக்கிறார். மேலும் வீடற்ற ஏழை விவசாய குடும்பத்தினருக்கு 3 சென்ட் நிலம் வழங்குவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருக்கிறார். இப்பகுதியில் உள்ள மக்களின் முக்கிய பிரச்சினையாக வீட்டு வரி உயர்த்தப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் கூறினர். அதனை குறைக்கவும் திமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் திமுக விற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.