ETV Bharat / briefs

போலி இ-பாஸ் தயாரிப்பு - கடைக்கு சீல்

author img

By

Published : Jun 12, 2020, 2:13 AM IST

நாகை: காரைக்காலில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய இணையதள கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

Karaikal Fake E pass product

கரோனா பொது முடக்கத்தால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அரசு அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கும் இ-பாஸ் பெற்ற வாகனங்கள் தமிழ்நாடு பகுதிகளுக்கு சென்று வந்த நிலையில் இதில் சிலர் போலியான இ-பாஸ் வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து நடத்திய விசாரணையில் காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதியில் உள்ள இணையதள உபயோகிக்கும் கடையில் போலியாக இ-பாஸ் அச்சடித்து அதிக விலைக்கு சட்ட விரோதமாக விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர்கள் போலியாக அச்சடித்து வைக்கப்படிருந்த இ-பாஸ் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்திய கருவிகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர். மேலும், போலி பாஸ் தயாரித்த சகத் உள்ளிட்ட கடை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா பொது முடக்கத்தால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அரசு அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கும் இ-பாஸ் பெற்ற வாகனங்கள் தமிழ்நாடு பகுதிகளுக்கு சென்று வந்த நிலையில் இதில் சிலர் போலியான இ-பாஸ் வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து நடத்திய விசாரணையில் காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதியில் உள்ள இணையதள உபயோகிக்கும் கடையில் போலியாக இ-பாஸ் அச்சடித்து அதிக விலைக்கு சட்ட விரோதமாக விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர்கள் போலியாக அச்சடித்து வைக்கப்படிருந்த இ-பாஸ் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்திய கருவிகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர். மேலும், போலி பாஸ் தயாரித்த சகத் உள்ளிட்ட கடை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.