ETV Bharat / briefs

சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞருக்கு 70,000 ரூபாய் அபராதம் - சதுரகிரி மலைக்கு அத்துமீறி நுழைந்த இளைஞர்

விருதுநகர் : சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்திய இளைஞருக்கு வனத்துறையினர் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

சதுரகிரி மலையில் அத்துமீறி நுழைந்த இளைஞர்
சதுரகிரி மலையில் அத்துமீறி நுழைந்த இளைஞர்
author img

By

Published : Jun 10, 2020, 3:15 PM IST



விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் மலைக்குள் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் வனத்துறையினர்கள் அப்பகுதிக்குள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற இளைஞர் டிராக்டர் மூலம் மணல் அள்ளியதோடு வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளைத் துன்புறுத்தியதைக் கண்டறிந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.



விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் மலைக்குள் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் வனத்துறையினர்கள் அப்பகுதிக்குள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற இளைஞர் டிராக்டர் மூலம் மணல் அள்ளியதோடு வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளைத் துன்புறுத்தியதைக் கண்டறிந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.