ETV Bharat / briefs

மயிலாடுதுறையில் அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி!

நாகை: அரசு மருத்துவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள சிடி ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 21, 2020, 10:08 PM IST

மயிலாடுதுறையில் அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி..!
மயிலாடுதுறையில் அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி..!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இதுநாள்வரை 260க்கும்மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

மேலும், 62 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது, அதில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவரும் ஸ்கேன் மைய பொறுப்பாளருமான பெண் மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் பணியாற்றிய ஸ்கேன் மையத்தை கிருமி நாசினி தெளித்து மருத்துவர்கள் பூட்டி சீல் வைத்தனர். தற்போது 76 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் கடன் தொல்லையால் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இதுநாள்வரை 260க்கும்மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

மேலும், 62 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது, அதில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவரும் ஸ்கேன் மைய பொறுப்பாளருமான பெண் மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் பணியாற்றிய ஸ்கேன் மையத்தை கிருமி நாசினி தெளித்து மருத்துவர்கள் பூட்டி சீல் வைத்தனர். தற்போது 76 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் கடன் தொல்லையால் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.