ETV Bharat / briefs

உயர்மின் கோபுர திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

author img

By

Published : Jul 31, 2020, 2:26 AM IST

திருப்பூர்: உயர் மின் கோபுர திட்டத்தை மாற்றுப்பாதையில் அமைத்திடக்கோரி நாடாளுமன்ற உறுப்பினார்களைச் சந்திக்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Farmers demand to divert to set up  high power tower project!
உயர் மின் கோபுரம்

தமிழ்நாடு அரசு மின் தொடரமைப்பு கழகம் அமைக்கவிருக்கும் விருதுநகர்-கோவை ஆகிய பகுதிகளில் 765 கே.வி. உயர் மின் கோபுர திட்டத்திற்கு மின் கோபுரம் அமைப்பது, காவுத்தம் பாளையத்தில் 180 ஏக்கர் பரப்பில் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் கருத்தரங்கு கூட்டம் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்து ரெட்டியபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர், பாதிக்கப்படும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது, "இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் அல்லது கேபிள் வழியாகச் செயல்படுத்த வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தியும் அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை.

நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறவோ, கருத்துக் கேட்கவோ தேவையில்லை என மசோதா கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்கள். இதைப் பார்க்கும்போது இது ஜனநாயக ரீதியான அரசா என சந்தேகிக்கும் அளவுக்கு அரசு நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களாகவே அரசு கொண்டுவரும் திட்டங்கள் உள்ளன" என்றனர்.

தமிழ்நாடு அரசு மின் தொடரமைப்பு கழகம் அமைக்கவிருக்கும் விருதுநகர்-கோவை ஆகிய பகுதிகளில் 765 கே.வி. உயர் மின் கோபுர திட்டத்திற்கு மின் கோபுரம் அமைப்பது, காவுத்தம் பாளையத்தில் 180 ஏக்கர் பரப்பில் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் கருத்தரங்கு கூட்டம் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்து ரெட்டியபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர், பாதிக்கப்படும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது, "இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் அல்லது கேபிள் வழியாகச் செயல்படுத்த வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தியும் அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை.

நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறவோ, கருத்துக் கேட்கவோ தேவையில்லை என மசோதா கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்கள். இதைப் பார்க்கும்போது இது ஜனநாயக ரீதியான அரசா என சந்தேகிக்கும் அளவுக்கு அரசு நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களாகவே அரசு கொண்டுவரும் திட்டங்கள் உள்ளன" என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.