ETV Bharat / briefs

கோவை மாநகராட்சியைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்திய சி.பி.எம் !

author img

By

Published : Jul 24, 2020, 5:44 AM IST

கோவை : கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாத மாநகராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சியைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்திய சி.பி.எம் !
கோவை மாநகராட்சியைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்திய சி.பி.எம் !

கோவை மாவட்டத்தை அடுத்துள்ள அத்திக்கடவு பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு 4ஆவது பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1100 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தற்போது பில்லூர் அணை பகுதியில் இருந்து திருப்பூர் வரை உள்ள சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீரைக் கொண்டு செல்ல வழிப் பாதைகளில் பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கரோனா நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அன்னூரில் உள்ள பிரதான சாலை வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி மிக மந்தமாக நடைபெற்று வருவதால் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அன்னூரில் இருந்து அவிநாசி செல்லும் சாலையிலும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அன்னூர் நகர் பகுதி முழுவதும கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகின்றது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில், வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன.

மேலும், ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் அரைகுறையாக மூடப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் அந்த வழியாக செல்லக்கூடிய லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி அதன் சேற்றில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வழி வகுக்கிறது.

இது தொடர்பாக வாகன ஓட்டிகள் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறிய முடிகிறது.

இந்நிலையில் இன்று அன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்னூர் ஒன்றிய செயலாளர் முகமது முசீர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாய் காட்சியளிக்கும் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டனர்.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில், "குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடாததால் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக் கொள்கிறது. பணிகள் முடிந்த நிலையிலும் பிரதான சாலைகள் இன்னும் சீரமைக்க வில்லை இதன் காரணமாக அவிநாசி -மேட்டுப்பாளையம் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலிகள் நிகழ்கின்றன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இனியும் தாமதம் ஏற்பட்டால் பொது மக்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்தனர்.

கோவை மாவட்டத்தை அடுத்துள்ள அத்திக்கடவு பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு 4ஆவது பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1100 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தற்போது பில்லூர் அணை பகுதியில் இருந்து திருப்பூர் வரை உள்ள சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீரைக் கொண்டு செல்ல வழிப் பாதைகளில் பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கரோனா நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அன்னூரில் உள்ள பிரதான சாலை வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி மிக மந்தமாக நடைபெற்று வருவதால் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அன்னூரில் இருந்து அவிநாசி செல்லும் சாலையிலும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அன்னூர் நகர் பகுதி முழுவதும கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகின்றது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில், வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன.

மேலும், ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் அரைகுறையாக மூடப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் அந்த வழியாக செல்லக்கூடிய லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி அதன் சேற்றில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வழி வகுக்கிறது.

இது தொடர்பாக வாகன ஓட்டிகள் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறிய முடிகிறது.

இந்நிலையில் இன்று அன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்னூர் ஒன்றிய செயலாளர் முகமது முசீர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாய் காட்சியளிக்கும் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டனர்.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில், "குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடாததால் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக் கொள்கிறது. பணிகள் முடிந்த நிலையிலும் பிரதான சாலைகள் இன்னும் சீரமைக்க வில்லை இதன் காரணமாக அவிநாசி -மேட்டுப்பாளையம் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலிகள் நிகழ்கின்றன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இனியும் தாமதம் ஏற்பட்டால் பொது மக்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.