ETV Bharat / briefs

கோவிட்-19 பீதி : திருநின்றவூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : Jul 2, 2020, 3:38 PM IST

சென்னை : திருநின்றவூரில் கரோனா அச்சத்தால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 பீதி : திருநின்றவூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
கோவிட்-19 பீதி : திருநின்றவூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், நாச்சியார் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார் (35). இவர் திருநின்றவூர், சி.டி.எச் சாலையில் உள்ள பாத்திரக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (30).

தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சக்திகுமார் தனக்கு தொற்று வந்துவிடுமோ என அச்சத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் அடிக்கடி தனது உறவினர்களிடம் தனக்கு தொற்று வந்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என புலம்பி வந்துள்ளளார்.

இதற்கிடையில், வேலைக்கு சென்றிருந்த ஈஸ்வரி, சக்திகுமாருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால், அவர் செல்போன் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து, பதற்றமடைந்த ஈஸ்வரி வீட்டுக்கு விரைந்து வந்துள்ளார். அப்போது சக்திகுமார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த நிலையில் இருந்தார்.

தகவலறிந்து திருநின்றவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், நாச்சியார் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார் (35). இவர் திருநின்றவூர், சி.டி.எச் சாலையில் உள்ள பாத்திரக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (30).

தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சக்திகுமார் தனக்கு தொற்று வந்துவிடுமோ என அச்சத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் அடிக்கடி தனது உறவினர்களிடம் தனக்கு தொற்று வந்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என புலம்பி வந்துள்ளளார்.

இதற்கிடையில், வேலைக்கு சென்றிருந்த ஈஸ்வரி, சக்திகுமாருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால், அவர் செல்போன் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து, பதற்றமடைந்த ஈஸ்வரி வீட்டுக்கு விரைந்து வந்துள்ளார். அப்போது சக்திகுமார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த நிலையில் இருந்தார்.

தகவலறிந்து திருநின்றவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.