இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020 மாதங்களில் நடைபெற உள்ள தேர்வுகளை எழுத உள்ள சொல்வதை எழுதுபவர் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டய தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர் களில் சொல்வது எழுதுபவர் வேண்டிய சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னர் அவர்கள் விருப்பத்தின் பெயரில் தங்கள் அளவிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்.