சென்னை தாம்பரம் நகராட்சியில் வரி வசூலிப்பாளராக வேலை பார்த்து வருபவர் அய்யப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல்.
இரண்டு நாள்களாக இவருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் உள்ளிட்ட கரோனா தொற்று அறிகுறிகள் இருந்த நிலையில், அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று உறுதி செய்யபட்டது.
இதைத் தொடர்ந்து அவருடன் வேலை பார்த்து வந்த 12 ஊழியர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது.
இதைடுத்து, நகராட்சி அலுவலகத்தில் பாதிக்கபட்டவரின் அறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நோய் அறிகுறி இல்லாததால் வழக்கம்போல் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.