ETV Bharat / briefs

கோவை அருகே 1942ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தோட்டா கண்டெடுப்பு

கோவை: செம்மேடு கிராமத்தில் மயானத்தை சுத்தம் செய்யும்போது பழைய துப்பாக்கி தோட்டா கிடைத்துள்ள சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

author img

By

Published : Jul 14, 2020, 6:39 PM IST

bullet
bullet

கோவை, மாவட்டம் ஆலாந்துறை அடுத்த செம்மேடு கிராமத்தின் நொய்யல் ஆற்றின் கரையில் மயானம் ஒன்று உள்ளது. அங்கு மதன்குமார் (35) என்பவர், இன்று(ஜூலை 14) சுத்தம் செய்தபோது, துப்பாக்கி தோட்டா ஒன்றை கண்டெடுத்தார்.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடம் வந்த ஆலாந்துறை காவல்துறையினர் தோட்டாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக பேரூர் வட்டாச்சியர் ராதாகிருஷ்ணனுக்குத் தகவல் அளித்தனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் தோட்டாவை ஆய்வு செய்ததில், தோட்டா, கடந்த 1942ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தோட்டாவை ஆயுதப்படை பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவை, மாவட்டம் ஆலாந்துறை அடுத்த செம்மேடு கிராமத்தின் நொய்யல் ஆற்றின் கரையில் மயானம் ஒன்று உள்ளது. அங்கு மதன்குமார் (35) என்பவர், இன்று(ஜூலை 14) சுத்தம் செய்தபோது, துப்பாக்கி தோட்டா ஒன்றை கண்டெடுத்தார்.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடம் வந்த ஆலாந்துறை காவல்துறையினர் தோட்டாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக பேரூர் வட்டாச்சியர் ராதாகிருஷ்ணனுக்குத் தகவல் அளித்தனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் தோட்டாவை ஆய்வு செய்ததில், தோட்டா, கடந்த 1942ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தோட்டாவை ஆயுதப்படை பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.