மதுரை மாவட்டம், காளவாசலில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான பால் வண்டி ஒன்று மதுரை ரயில்வே மேற்கு நுழைவாயில் அருகேயுள்ள மேம்பாலத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இந்த விபத்தில், வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனர் முனியாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கீழே விழுந்த வாகனத்தை தீயணைப்பு துறையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மாட்டுச் சானம் கரைத்து தலையில் ஊற்றி பிறந்தநாள் கொண்டாட்டம்!