ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் "தி கேரளா ஸ்டோரி" படம் திரையிடத் தடை - மாநில அரசு உத்தரவு!

author img

By

Published : May 8, 2023, 8:24 PM IST

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தடை விதித்து மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

West Bengal government bans The Kerala Story movie
West Bengal government bans The Kerala Story movie

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தடை விதிப்பதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம், தி கேரளா ஸ்டோரி. படம் வெளியாவதற்கு முன் பயங்கர எதிர்ப்புகளைச் சந்தித்தது. கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை ஒரு இஸ்லாமிய பெண் மூளைச் சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றி, தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் குழுப்பில் இணைப்பது போன்று கதையாக்கப்பட்டு உள்ளது.

இந்த திரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே நாடு முழுவதும் படத்திற்கான எதிர்ப்பு தீவிரமாக கிளம்பியது. படத்தை தடை செய்யக் கோரி, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கேரளாவை கதைக் களமாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை அந்த மாநிலத்திலேயே தடை செய்ய கேரள உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து விட்டது. தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் படம் வெளியான நிலையில், திரையரங்குகள் முன் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது ஒரு புறம் இருக்க வடமாநிலங்களில் இந்தப் படத்திற்கு ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப்பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளித்து அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மீது உத்தரவிட்டார். அதேநேரம் மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார். மாநில அரசின் இந்த உத்தரவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது குறித்து மேற்கு வங்க மாநில பாஜக ஐடி-விங் தலைவர் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், மேற்கு வங்கத்தில் கேரளா ஸ்டோரி படத்திற்குத் தடை விதித்த மம்தா பானர்ஜியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது சிவில் உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மீது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.

மாநிலத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 7ஆம் தேதி வரை 35 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு? தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தடை விதிப்பதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம், தி கேரளா ஸ்டோரி. படம் வெளியாவதற்கு முன் பயங்கர எதிர்ப்புகளைச் சந்தித்தது. கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை ஒரு இஸ்லாமிய பெண் மூளைச் சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றி, தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் குழுப்பில் இணைப்பது போன்று கதையாக்கப்பட்டு உள்ளது.

இந்த திரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே நாடு முழுவதும் படத்திற்கான எதிர்ப்பு தீவிரமாக கிளம்பியது. படத்தை தடை செய்யக் கோரி, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கேரளாவை கதைக் களமாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை அந்த மாநிலத்திலேயே தடை செய்ய கேரள உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து விட்டது. தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் படம் வெளியான நிலையில், திரையரங்குகள் முன் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது ஒரு புறம் இருக்க வடமாநிலங்களில் இந்தப் படத்திற்கு ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப்பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளித்து அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மீது உத்தரவிட்டார். அதேநேரம் மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார். மாநில அரசின் இந்த உத்தரவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது குறித்து மேற்கு வங்க மாநில பாஜக ஐடி-விங் தலைவர் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், மேற்கு வங்கத்தில் கேரளா ஸ்டோரி படத்திற்குத் தடை விதித்த மம்தா பானர்ஜியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது சிவில் உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மீது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.

மாநிலத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 7ஆம் தேதி வரை 35 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு? தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.