ETV Bharat / bharat

ஆங்கிலக்கால்வாயை நீந்தி கடந்து சாதனைப் படைத்த துளசி சைதன்யா!

author img

By

Published : Jul 31, 2022, 4:39 PM IST

விஜயவாடாவைச் சேர்ந்த தலைமைக்காவலர் துளசி சைதன்யா ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

Vijayawada
Vijayawada

ஆந்திரா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச்சேர்ந்த காவல்துறை தலைமைக் காவலர் துளசி சைதன்யா, நீச்சலின் 'எவரெஸ்ட் சிகரம்' என்று அழைக்கப்படும் ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்துள்ளார்.

இங்கிலாந்தின் டோவர் கடற்கரையிலிருந்து பிரான்சின் கலேஸ் கடற்கரை வரை, 33. 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆங்கிலக் கால்வாயை, 15 மணி நேரம் 18 நிமிடங்களில் நீந்தி சாதனைப்படைத்துள்ளார்.

ஜெர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே உள்ள போடன்சீ ஜலசந்தி மற்றும் இங்கிலாந்து கடற்கரையில் உள்ள மேலும் இரண்டு கால்வாய்களை நீந்தத் தயாராகி வருவதாக துளசி சைதன்யா தெரிவித்தார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் தெலுங்கு வீரர் என்ற பெருமையை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் துளசி சைதன்யா தெரிவித்தார்.

இதையும் படிங்க:வைரல் வீடியோ: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோயில்!

ஆந்திரா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச்சேர்ந்த காவல்துறை தலைமைக் காவலர் துளசி சைதன்யா, நீச்சலின் 'எவரெஸ்ட் சிகரம்' என்று அழைக்கப்படும் ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்துள்ளார்.

இங்கிலாந்தின் டோவர் கடற்கரையிலிருந்து பிரான்சின் கலேஸ் கடற்கரை வரை, 33. 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆங்கிலக் கால்வாயை, 15 மணி நேரம் 18 நிமிடங்களில் நீந்தி சாதனைப்படைத்துள்ளார்.

ஜெர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே உள்ள போடன்சீ ஜலசந்தி மற்றும் இங்கிலாந்து கடற்கரையில் உள்ள மேலும் இரண்டு கால்வாய்களை நீந்தத் தயாராகி வருவதாக துளசி சைதன்யா தெரிவித்தார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் தெலுங்கு வீரர் என்ற பெருமையை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் துளசி சைதன்யா தெரிவித்தார்.

இதையும் படிங்க:வைரல் வீடியோ: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோயில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.