ETV Bharat / bharat

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம்; சட்ட வரைவுக்குழு அமைப்பு!

author img

By

Published : May 28, 2022, 5:30 PM IST

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட வரைவுக்குழுவை அமைத்துள்ளதாக உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.

Uttarakhand
Uttarakhand

உத்தரகாண்ட்: பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசு தீவிரம் காட்டிவருகிறது. நாட்டில் ஏற்கனவே ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுவோருக்கான சிவில் உரிமைகளை நிலைநிறுத்தும் தனிச்சட்டங்கள் நடைமுறையில் இருந்துவருகின்றன.

இந்த நிலையில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே விதமான சிவில் சட்டங்களை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே உள்ள மதங்களின் தனிப்பட்ட சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆகையால், இந்தப் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், பா.ஜ.க ஆளும் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட வரைவுக்குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்துள்ளது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வரைவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் கலாசாரத்தைப் பாதுகாக்கவும், அனைத்து மத சமூகங்களுக்கும் ஒற்றுமையை வழங்கவும் இந்தச் சட்டம் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சட்ட வரைவுக்குழுவை அமைத்த முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும். அண்மையில் உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க:பொது சிவில் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது - அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியம்!

உத்தரகாண்ட்: பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசு தீவிரம் காட்டிவருகிறது. நாட்டில் ஏற்கனவே ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுவோருக்கான சிவில் உரிமைகளை நிலைநிறுத்தும் தனிச்சட்டங்கள் நடைமுறையில் இருந்துவருகின்றன.

இந்த நிலையில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே விதமான சிவில் சட்டங்களை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே உள்ள மதங்களின் தனிப்பட்ட சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆகையால், இந்தப் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், பா.ஜ.க ஆளும் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட வரைவுக்குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்துள்ளது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வரைவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் கலாசாரத்தைப் பாதுகாக்கவும், அனைத்து மத சமூகங்களுக்கும் ஒற்றுமையை வழங்கவும் இந்தச் சட்டம் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சட்ட வரைவுக்குழுவை அமைத்த முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும். அண்மையில் உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க:பொது சிவில் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது - அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.