ETV Bharat / bharat

இந்திய வம்சாவளி அமைச்சரை பதவி நீக்கம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 5:50 PM IST

UK Prime Minister Rishi Sunak: பிரிட்டனில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்பவர்களுக்கு காவல்துறை ஆதரவாகவும் மென்மையாகவும் நடந்து கொள்கிறது என குற்றம் சாட்டிய உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை பிரதமர் ரிஷி சுனக் பதவி நீக்கம் செய்துள்ளார்.

UK leader fires interior minister who accused police of favoring pro-Palestinian protesters.
இந்திய வம்சாவளி அமைச்சரை பதவி நீக்கம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்!

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று (நவ.13) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறை மீது குற்றம் சாட்டி அமைச்சர் செய்திகள் வெளியிட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என லண்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கோவா வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மன் பிரிட்டன் கேபினட் மூத்த அமைச்சராக இருந்து வருகிறார். இவர் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் சுயெல்லா பிரேவர்மன் செய்திகளுக்கு அளித்த கட்டுரையில் பாலஸ்தினியர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் செய்பவர்களுக்குக் காவல் துறையினர் ஆதரவாகவும் மென்மையாகவும் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியது தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் ரிஷி சுனக் எதிர்க்கட்சிகளில் தாக்குதலுக்கு ஆளானர். மேலும் அமைச்சர் சட்டத்தை மீறியதாகக் கூறி அவரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி எதிர்க்கட்சிகள் அழுத்தம் தரத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று (நவ.12) அமைச்சர் சுயெல்லா பிரேவர்மன் கூறும் போது, "லண்டனில் போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்திய ஒவ்வொரு துணிச்சலான காவல் துறையினருக்கு நன்றிகள் எனவும் தனது கடமைகளைச் செய்யும் போது பலர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களின் செயல்கள் கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்து இருந்தார்.

தற்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், தனது அமைச்சரவை ரிஷி சுனக் இன்று மாற்றி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இங்கிலாந்து பிரதமருக்கு விசேஷ தீபாவளி பரிசு.. கோலி கையெழுத்திட்ட பேட் பரிசளித்த ஜெய்சங்கர்!

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று (நவ.13) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறை மீது குற்றம் சாட்டி அமைச்சர் செய்திகள் வெளியிட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என லண்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கோவா வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மன் பிரிட்டன் கேபினட் மூத்த அமைச்சராக இருந்து வருகிறார். இவர் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் சுயெல்லா பிரேவர்மன் செய்திகளுக்கு அளித்த கட்டுரையில் பாலஸ்தினியர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் செய்பவர்களுக்குக் காவல் துறையினர் ஆதரவாகவும் மென்மையாகவும் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியது தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் ரிஷி சுனக் எதிர்க்கட்சிகளில் தாக்குதலுக்கு ஆளானர். மேலும் அமைச்சர் சட்டத்தை மீறியதாகக் கூறி அவரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி எதிர்க்கட்சிகள் அழுத்தம் தரத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று (நவ.12) அமைச்சர் சுயெல்லா பிரேவர்மன் கூறும் போது, "லண்டனில் போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்திய ஒவ்வொரு துணிச்சலான காவல் துறையினருக்கு நன்றிகள் எனவும் தனது கடமைகளைச் செய்யும் போது பலர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களின் செயல்கள் கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்து இருந்தார்.

தற்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், தனது அமைச்சரவை ரிஷி சுனக் இன்று மாற்றி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இங்கிலாந்து பிரதமருக்கு விசேஷ தீபாவளி பரிசு.. கோலி கையெழுத்திட்ட பேட் பரிசளித்த ஜெய்சங்கர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.