கேரளா: பாலக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் டிஜிட்டல் வருகைப்பதிவேடு பொருத்தப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் ஃபின்கர் ப்ரிண்ட் வைத்தவுடன், அவர்களின் வருகை தானாக பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் பெற்றோரின் மொபைல் போன்களுக்கும் சென்றுவிடும்.
இந்த வருகை பதிவேடு முன்னோட்டமாகவே பொருத்தப்பட்டுள்ளது. மாநிலக் கல்வித் துறை இந்த தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்தவுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், இந்த இயந்திரம் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த பள்ளியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் திறமையை ஊக்குவிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு அடல் டிங்கரிங் லேப் (Adal Tinkering Lab) (ATL) நிறுவப்பட்டது. இதில் மாணவிகளுக்கு அறிவியல் தியரி கற்க வைப்பதே முக்கிய நேக்கமாகும்.
இந்த லேப் மூலமாகவே டிஜிட்டல் வருகைப்பதிவேடு இயந்திரம் உருவாக்கிப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குள் நுழைகிறார்கள், வெளியேறுகிறார்கள் என்பதை துல்லியமாக அறிந்துகொள்வார்கள்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் ஆகியவற்றில் ஆர்வமுள்ள 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இதுபோன்ற கருவிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் மேலும் வலுப்படும் - போரிஸ் ஜான்சன்