ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தில் பேஸ்புக்கை தாக்கிய சோனியா காந்தி!

author img

By

Published : Mar 16, 2022, 2:34 PM IST

Updated : Mar 16, 2022, 2:44 PM IST

தவறான விளம்பரங்களை பதிவிட்டு, இளம் வயது முதல் முதியவர்கள் வரை வெறுப்பூட்டும் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் கொண்டுசெல்கிறது எனவும் இதைக்கொண்டு அந்நிறுவனம் பெருமளவில் லாபம் ஈட்டி வருகிறது என்றும் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Sonia Gandhi on Social Media advertising  questions FB Twitter disrupting social harmony  social media shape political narratives favor BJP  no level playing field for Opposition  சோனியா காந்தி  அரசியலில் சமூக வலைதளங்கள் குறித்து சோனியா  சமூக வலைதளங்களின் செல்வாக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்  மக்களவையில் சோனியா காந்தி  சோனியா காந்தி பேச்சி
சோனியா காந்தி

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு நேற்று முன்தினம் (மார்ச் 14) தொடங்கியது. ஏப்ரல் 8ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமர்வின் 3ஆவது நாள் இன்று (மார்ச் 16) தொடங்கியது. இதில், இந்திய ஜனநாயகத்தில், சமூக ஊடகங்களின் செல்வாக்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து

இதுதொடர்பாக மக்களவையின் பூஜ்ய நேரத்தில் 'அல் ஜசீரா' மற்றும் 'தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையை குறிப்பிட்டு பேசிய அவர், “உலகளாவிய நிறுவனமான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை, அரசியல் பிரமூகர்கள், தங்களது கட்சியினை மேம்படுத்துவதற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அரசுக்கு எதிர்க்குரல் கொடுப்பவர்களை முடக்கியும், தேர்தல் விதிமுறைகளை மீறியும், பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. மேலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இத்தகைய செயல், ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். தவறான விளம்பரங்களை பதிவிட்டு, இளம் வயது முதல் முதியவர்கள் வரை, வெறுப்பூட்டும் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் கொண்டுசெல்கிறது. இதனால், பெருமளவில் லாபம் ஈட்டி வருகிறது. ஆகையால், இந்திய ஜனநாயகத்தில், சமூக ஊடகங்களின் செல்வாக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு நேற்று முன்தினம் (மார்ச் 14) தொடங்கியது. ஏப்ரல் 8ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமர்வின் 3ஆவது நாள் இன்று (மார்ச் 16) தொடங்கியது. இதில், இந்திய ஜனநாயகத்தில், சமூக ஊடகங்களின் செல்வாக்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து

இதுதொடர்பாக மக்களவையின் பூஜ்ய நேரத்தில் 'அல் ஜசீரா' மற்றும் 'தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையை குறிப்பிட்டு பேசிய அவர், “உலகளாவிய நிறுவனமான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை, அரசியல் பிரமூகர்கள், தங்களது கட்சியினை மேம்படுத்துவதற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அரசுக்கு எதிர்க்குரல் கொடுப்பவர்களை முடக்கியும், தேர்தல் விதிமுறைகளை மீறியும், பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. மேலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இத்தகைய செயல், ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். தவறான விளம்பரங்களை பதிவிட்டு, இளம் வயது முதல் முதியவர்கள் வரை, வெறுப்பூட்டும் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் கொண்டுசெல்கிறது. இதனால், பெருமளவில் லாபம் ஈட்டி வருகிறது. ஆகையால், இந்திய ஜனநாயகத்தில், சமூக ஊடகங்களின் செல்வாக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

Last Updated : Mar 16, 2022, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.