ETV Bharat / bharat

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்

author img

By

Published : Oct 6, 2021, 12:08 PM IST

Updated : Oct 6, 2021, 3:13 PM IST

குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்

டெல்லியில் ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் முடக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டம் ஒன்றை டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டிவருகிறது. இதன் நோக்கம் ஏழை மக்கள் பயன் அடைய வேண்டும், ரேஷன் பொருள்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்க முடியும் என்பதே.

ஆனால் அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் அனுமதியளிக்க மறுத்துவிட்டதால் இந்தத் திட்டம் அப்படியே நின்றுவிட்டது.

இதுத் தொடர்பான வழக்கு விசாரணையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பான கணக்கெடுக்கும் பணிகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதனைத் தொடர்ந்து அவை அனைத்தும் முடக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: ஆபத்பாந்தவன்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்த வெகுமதி!

டெல்லியில் ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் முடக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டம் ஒன்றை டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டிவருகிறது. இதன் நோக்கம் ஏழை மக்கள் பயன் அடைய வேண்டும், ரேஷன் பொருள்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்க முடியும் என்பதே.

ஆனால் அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் அனுமதியளிக்க மறுத்துவிட்டதால் இந்தத் திட்டம் அப்படியே நின்றுவிட்டது.

இதுத் தொடர்பான வழக்கு விசாரணையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பான கணக்கெடுக்கும் பணிகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதனைத் தொடர்ந்து அவை அனைத்தும் முடக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: ஆபத்பாந்தவன்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்த வெகுமதி!

Last Updated : Oct 6, 2021, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.