புதுச்சேரியில் நிவர், புரெவி புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில் கடந்த சில நாள்களாக மழை ஓய்ந்திருந்து.
தேங்கிய நீர்
நேற்று முன்தினம் (டிச. 15) நள்ளிரவுமுதல் புதுச்சேரி நகரம், கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
தொடர் மழையால் நகரின் தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், பூமியின் பேட்டை, வெங்கட்டா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
விடுமுறை உத்தரவு
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் பள்ளிக் கல்வித் துறை இன்று (டிச. 17) விடுமுறை அளித்து உத்திரவிட்டுள்ளது.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதியடைந்துள்ளனர். கரோனா தொற்று தாக்கம் குறைவால் புதுச்சேரியில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகள் மட்டுமே இயங்கிவருகின்றன.
கல்லூரிகள் திறப்பு
இதற்கிடையே கரோனா ஊரடங்கிற்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆவலுடன் தங்களது கல்லூரிகளுக்குச் சென்றனர்.
இதையும் படிங்க... புதுச்சேரி டிஜிபி திடீரென டெல்லிக்கு மாற்றம் என்?