மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி, அதன் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மூன்று மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துவருகின்றன.
இந்நிலையில், சர்வதேச சமூகத்திலிருந்து விவசாயிகளுக்கான ஆதரவுக்குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. பிரபல பாப் பாடகி ரிஹான்னா, சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் இருவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021 \" class="align-text-top noRightClick twitterSection" data="
\">why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
\why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைச் சுட்டிக்காட்டிய பாடகி ரிஹான்னா இது போன்ற விஷயங்களை நாம் ஏன் பேச மறுக்கின்றோம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதே செய்தியைச் சுட்டிக்காட்டி, இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன் என கிரேட்டா தன்பெர்க்கும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 100 வயதில் ரூ.328 கோடி நிதி திரட்டிய உலகப்போர் நாயகன் டாம் மூர் காலமானார்!