புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாள்கள் பயணமாக புதுச்சேரிக்கு வரும் 13ஆம் தேதி இரவு வருகிறார். ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர் மறுநாள் புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து பொறியியல் கல்லூரி, ஜிப்மரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இதுகுறித்து காவல் துறை உயர் அலுவலர், ”குடியரசு துணை தலைவர் புதுச்சேரி வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது எனினும் அவர் எந்த தேதியில் எந்தெந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. புதுச்சேரி, கோரிமேடு, ஜிப்மர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது “எனத் தெரிவித்தார்