ETV Bharat / bharat

மழை நிவாரணமாக ரூ.5000 வழங்கும் பணி தொடக்கம் - முதலமைச்சர் ரங்கசாமி மழை நிவாரணம்

புதுச்சேரியில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரண தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ரங்கசாமி
முதலமைச்சர் ரங்கசாமி
author img

By

Published : Dec 21, 2021, 3:25 PM IST

புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். அதன்படி சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணத்தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள 3 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளது. இதற்காக முதல்கட்டமாக 156 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உடனிருந்தனர்.

புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். அதன்படி சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணத்தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள 3 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளது. இதற்காக முதல்கட்டமாக 156 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.