ETV Bharat / bharat

அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம்... வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

author img

By

Published : Jul 18, 2021, 10:13 PM IST

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒன்றிய அரசை வைகோ கடுமையாக சாடிய போதும், இறுதியாக அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை.18) தொடங்கவுள்ள நிலையில், இன்று பிற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். நிகழ்ச்சி நிறைவு பெறுகின்ற வேளையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

நேர குறைப்புக்கு வைகோ எதிர்ப்பு

கூட்டம் முடிகின்ற வேளையில் பேசிய கட்சிகளின் உறுப்பினர்களைப் பார்த்து, 'குறைந்த நேரம் பேசுங்கள்' என்று பிரகலாத் ஜோஷி சொன்னபோது, வைகோ எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஒரு கட்சிக்கு ஒருத்தரை பேச அனுமதியுங்கள்

அப்போது வைகோ பேசுகையில், 'இந்தக் கூட்டத்தில் ஒரு கட்சிக்கு ஒருவரைத்தான் பேச அனுமதித்திருக்க வேண்டும். பல கட்சிகளில் இரண்டு உறுப்பினர்களைப் பேச அனுமதித்தீர்கள். அதனால், எங்களைப் போன்ற மற்ற கட்சிகளுக்கு நேரத்தைக் குறைக்கின்றீர்கள்.

வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

ஆபத்தான பாதையில் இந்தியா

இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகின்றீர்கள். சமூக நீதியை, சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கின்றீர்கள்.

ஒருமைப்பாடு நிலைக்க... அரசின் நிலைப்பாடு மாற வேண்டும்

எண்ணற்ற தலைவர்களும், தொண்டர்களும் எத்தனையோ தியாகங்கள் செய்து விடுதலை பெற்றோம். இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும் என்றால், இன்றைய அரசின் நிலைப்பாடு மாற வேண்டும்.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு, ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றீர்கள்.

13 மாணவ, மாணவகளின் உயிரைப் பறித்தது நீட்

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், நீட் தேர்வு 13 மாணவ, மாணவியரின் உயிர்களைப் பறித்து விட்டது. காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

மேகதாது அணைப் பிரச்னை

கொழுந்துவிட்டு எரிகின்ற மேகதாது அணைப் பிரச்னையில், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துக் கருத்துச் சொல்ல, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு குழுவை அனுப்பினார்.

நானும் அந்தக் குழுவில் இடம் பெற்றேன். மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று, அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சொன்னார். ஆனால், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியைச் சந்திக்கின்றார். மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார்.

மோடி வைகோ சந்திப்பு

முயலோடு சேர்ந்து ஓடுவது, வேட்டை நாயோடு சேர்ந்து துரத்துவது போன்ற அணுகுமுறையை, ஒன்றிய அரசு பின்பற்றி வருகின்றது. இத்தகைய போக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தைக் காக்கின்ற அணுகுமுறை வேண்டும்' எனக் கூறினார்.

கூட்டம் முடிந்தவுடன், பிரதமர் மோடி நேராக வைகோவிடம் சென்று பேசினார். வைகோவின் கையைப் பிடித்து குலுக்கி நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க: 'மீண்டும் பொறியியல் நுழைவுத் தேர்வை நடத்துக' - முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்

மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை.18) தொடங்கவுள்ள நிலையில், இன்று பிற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். நிகழ்ச்சி நிறைவு பெறுகின்ற வேளையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

நேர குறைப்புக்கு வைகோ எதிர்ப்பு

கூட்டம் முடிகின்ற வேளையில் பேசிய கட்சிகளின் உறுப்பினர்களைப் பார்த்து, 'குறைந்த நேரம் பேசுங்கள்' என்று பிரகலாத் ஜோஷி சொன்னபோது, வைகோ எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஒரு கட்சிக்கு ஒருத்தரை பேச அனுமதியுங்கள்

அப்போது வைகோ பேசுகையில், 'இந்தக் கூட்டத்தில் ஒரு கட்சிக்கு ஒருவரைத்தான் பேச அனுமதித்திருக்க வேண்டும். பல கட்சிகளில் இரண்டு உறுப்பினர்களைப் பேச அனுமதித்தீர்கள். அதனால், எங்களைப் போன்ற மற்ற கட்சிகளுக்கு நேரத்தைக் குறைக்கின்றீர்கள்.

வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

ஆபத்தான பாதையில் இந்தியா

இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகின்றீர்கள். சமூக நீதியை, சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கின்றீர்கள்.

ஒருமைப்பாடு நிலைக்க... அரசின் நிலைப்பாடு மாற வேண்டும்

எண்ணற்ற தலைவர்களும், தொண்டர்களும் எத்தனையோ தியாகங்கள் செய்து விடுதலை பெற்றோம். இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும் என்றால், இன்றைய அரசின் நிலைப்பாடு மாற வேண்டும்.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு, ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றீர்கள்.

13 மாணவ, மாணவகளின் உயிரைப் பறித்தது நீட்

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், நீட் தேர்வு 13 மாணவ, மாணவியரின் உயிர்களைப் பறித்து விட்டது. காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

மேகதாது அணைப் பிரச்னை

கொழுந்துவிட்டு எரிகின்ற மேகதாது அணைப் பிரச்னையில், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துக் கருத்துச் சொல்ல, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு குழுவை அனுப்பினார்.

நானும் அந்தக் குழுவில் இடம் பெற்றேன். மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று, அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சொன்னார். ஆனால், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியைச் சந்திக்கின்றார். மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார்.

மோடி வைகோ சந்திப்பு

முயலோடு சேர்ந்து ஓடுவது, வேட்டை நாயோடு சேர்ந்து துரத்துவது போன்ற அணுகுமுறையை, ஒன்றிய அரசு பின்பற்றி வருகின்றது. இத்தகைய போக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தைக் காக்கின்ற அணுகுமுறை வேண்டும்' எனக் கூறினார்.

கூட்டம் முடிந்தவுடன், பிரதமர் மோடி நேராக வைகோவிடம் சென்று பேசினார். வைகோவின் கையைப் பிடித்து குலுக்கி நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க: 'மீண்டும் பொறியியல் நுழைவுத் தேர்வை நடத்துக' - முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.