ETV Bharat / bharat

'எனது கட்சியின் பெயரை ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' - குலாம் நபி ஆசாத்

author img

By

Published : Sep 4, 2022, 6:12 PM IST

Updated : Sep 4, 2022, 6:29 PM IST

தனது கட்சியின் பெயரை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கட்சியின் பெயரையும், கொடியையும் ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

People குலாம் நபி ஆசாத்
People குலாம் நபி ஆசாத்

ஜம்மு: காங்கிரஸ் கட்சின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத், அண்மையில் காங்கிரசிலிருந்து விலகினார். காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த அவர், அதிலிருந்து வெளியேறினார்.

காங்கிரஸ் தனது வீடு என்றும் அதிலிருந்து தனது நண்பர்களால் வெளியேற்றப்பட்டதாகவும் குலாம்நபி ஆசாத் தெரிவித்திருந்தார். காங்கிரசிலிருந்து விலகிய அவர், பாஜகவில் இணைவார் என பேசப்பட்ட நிலையில், தனி அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக ஆசாத் அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் காங்கிரசிலிருந்து விலகினர்.

இந்த நிலையில், ஜம்முவில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என ஆசாத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "எனது கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் எனது கட்சியின் பெயரையும், அதன் கொடியையும் முடிவு செய்ய வேண்டும். எனது கட்சிக்கு நான் ஒரு இந்துஸ்தானி பெயரைத்தான் வைப்பேன்.

அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். எனது கட்சி, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதிலும், காஷ்மீரின் பூர்வகுடிகளின் நில உரிமையை மீட்பதிலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தருவதிலும் கவனம் செலுத்தும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து வெளியேறும் கட்டாய நிலைக்குத்தள்ளப்பட்டேன்... குலாம் நபி ஆசாத் பேட்டி...

ஜம்மு: காங்கிரஸ் கட்சின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத், அண்மையில் காங்கிரசிலிருந்து விலகினார். காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த அவர், அதிலிருந்து வெளியேறினார்.

காங்கிரஸ் தனது வீடு என்றும் அதிலிருந்து தனது நண்பர்களால் வெளியேற்றப்பட்டதாகவும் குலாம்நபி ஆசாத் தெரிவித்திருந்தார். காங்கிரசிலிருந்து விலகிய அவர், பாஜகவில் இணைவார் என பேசப்பட்ட நிலையில், தனி அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக ஆசாத் அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் காங்கிரசிலிருந்து விலகினர்.

இந்த நிலையில், ஜம்முவில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என ஆசாத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "எனது கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் எனது கட்சியின் பெயரையும், அதன் கொடியையும் முடிவு செய்ய வேண்டும். எனது கட்சிக்கு நான் ஒரு இந்துஸ்தானி பெயரைத்தான் வைப்பேன்.

அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். எனது கட்சி, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதிலும், காஷ்மீரின் பூர்வகுடிகளின் நில உரிமையை மீட்பதிலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தருவதிலும் கவனம் செலுத்தும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து வெளியேறும் கட்டாய நிலைக்குத்தள்ளப்பட்டேன்... குலாம் நபி ஆசாத் பேட்டி...

Last Updated : Sep 4, 2022, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.