ETV Bharat / bharat

'ஆபரேஷன் புளூஸ்டார்' நினைவு தினம் - பொற்கோயிலில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக முழக்கம்!

author img

By

Published : Jun 6, 2022, 7:58 PM IST

பஞ்சாப் பொற்கோயிலில் நடந்த 'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையின், 38ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

operation
operation

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளை பிடிப்பதற்காக, கடந்த 1984ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 'ஆபரேஷன் புளூஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆபரேஷனில் பிரிவினைவாதிகள், பொதுமக்கள் என '1,592 பேர்' உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தின் 38ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொற்கோயிலைச் சுற்றி 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான ஆயுதங்களையும் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி, ஏராளமான சீக்கியர்கள் கோயிலுக்கு வெளியே கூடினர்.

'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொற்கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அகல் தக்த் சாஹிப் அறக்கட்டளையின் தலைவர் கியானி ஹர்ப்ரீத் சிங் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், சீக்கியர்களை கையாள்வதற்காக அப்போதைய அரசு பல்வேறு நடைமுறைகளை கையாண்டது. சீக்கியர்களை எல்லா வகையிலும் பலவீனப்படுத்துவதே அரசின் நோக்கமாக இருந்தது. 1984-ல் சீக்கிய குருமார்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. நமக்கு பல சவால்கள் உள்ளன. நாம் போராட வேண்டியுள்ளது.

இன்று கிறிஸ்தவ மதம் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் பரப்புரை செய்யப்படுகிறது. இது நமக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. சீக்கிய மத போதகர்கள் கிராமம் கிராமமாகச் சென்று மதப்பரப்புரையில் ஈடுபட கேட்டுக்கொள்கிறேன். அதனால் சீக்கிய மதம் வலுபெறும். நாம் வலுவாக இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம். நமது இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து கியானி ஹர்ப்ரீத் சிங் செய்தியாளர்களை சந்தித்தபோது, பொற்கோயிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஹர்ப்ரீத் சிங், "இந்த பாதுகாப்பு சீக்கியர்களின் பாதுகாப்பிற்காக அல்ல, சிங்கங்களை தடுப்பதற்காகத்தான். நாங்கள் சீக்கிய இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்போம். ஆனால், ஒருபோதும் ஆதரவற்ற மற்றும் அப்பாவி மக்களைத் தாக்க மாட்டோம்.

பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் இளைஞர்களுக்கு ரகசியமாக ஆயுதப்பயிற்சி அளிக்கிறார்கள், ஆனால் முறையாக உரிமம் பெற்ற ஆயுதங்களை சீக்கியர்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'கடவுளை கூட அபிஷேகம் செய்து ஏமாற்றிவிடலாம்: ஆனால்.. ' - பார்த்திபன் பேச்சு!

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளை பிடிப்பதற்காக, கடந்த 1984ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 'ஆபரேஷன் புளூஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆபரேஷனில் பிரிவினைவாதிகள், பொதுமக்கள் என '1,592 பேர்' உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தின் 38ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொற்கோயிலைச் சுற்றி 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான ஆயுதங்களையும் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி, ஏராளமான சீக்கியர்கள் கோயிலுக்கு வெளியே கூடினர்.

'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொற்கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அகல் தக்த் சாஹிப் அறக்கட்டளையின் தலைவர் கியானி ஹர்ப்ரீத் சிங் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், சீக்கியர்களை கையாள்வதற்காக அப்போதைய அரசு பல்வேறு நடைமுறைகளை கையாண்டது. சீக்கியர்களை எல்லா வகையிலும் பலவீனப்படுத்துவதே அரசின் நோக்கமாக இருந்தது. 1984-ல் சீக்கிய குருமார்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. நமக்கு பல சவால்கள் உள்ளன. நாம் போராட வேண்டியுள்ளது.

இன்று கிறிஸ்தவ மதம் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் பரப்புரை செய்யப்படுகிறது. இது நமக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. சீக்கிய மத போதகர்கள் கிராமம் கிராமமாகச் சென்று மதப்பரப்புரையில் ஈடுபட கேட்டுக்கொள்கிறேன். அதனால் சீக்கிய மதம் வலுபெறும். நாம் வலுவாக இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம். நமது இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து கியானி ஹர்ப்ரீத் சிங் செய்தியாளர்களை சந்தித்தபோது, பொற்கோயிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஹர்ப்ரீத் சிங், "இந்த பாதுகாப்பு சீக்கியர்களின் பாதுகாப்பிற்காக அல்ல, சிங்கங்களை தடுப்பதற்காகத்தான். நாங்கள் சீக்கிய இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்போம். ஆனால், ஒருபோதும் ஆதரவற்ற மற்றும் அப்பாவி மக்களைத் தாக்க மாட்டோம்.

பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் இளைஞர்களுக்கு ரகசியமாக ஆயுதப்பயிற்சி அளிக்கிறார்கள், ஆனால் முறையாக உரிமம் பெற்ற ஆயுதங்களை சீக்கியர்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'கடவுளை கூட அபிஷேகம் செய்து ஏமாற்றிவிடலாம்: ஆனால்.. ' - பார்த்திபன் பேச்சு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.