ETV Bharat / bharat

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர்.. சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 'செங்கோல்'

author img

By

Published : May 28, 2023, 10:11 AM IST

Updated : May 28, 2023, 2:36 PM IST

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள நாடாளுமன்ற புதிய கட்டடத்தை, பிரதமர் மோடி, திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலை, வணங்கி பெற்றுக் கொண்ட பிறகு, அதை, சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார்.

New Parliament inauguration ceremony PM Modi installs sacred Sengol in Lok Sabha chamber
நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்பிரதமர் - சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல்!
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் இருக்கை அருகே 'செங்கோல்' வைத்து மரியாதை செய்த பிரதமர் மோடி

டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று (மே 28) பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்காக காலையிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் காந்தியின் உருவச் சிலைக்கு மலர் தூவினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை, தமிழ்நாட்டு ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

பிரதமர் மோடி, செங்கோலின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் . ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை வாங்கி, நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே அதை நிறுவினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர், ஜிதேந்திர சிங், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே,பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து மத பிரார்த்தனைகள் நடந்தது. அப்போது இந்து, கிறித்தவம், இஸ்லாம், சீக்கியம் உள்ளிட்ட 12 மதங்களின் தலைவர்கள், தாங்கள் வழிபடும் கடவுள்களை நினைத்து, அவரவர்கள் வழக்கப்படி, சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இந்த விழாவில் தேவார பாடல்கள் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டட தொழிலாளர்கள் கவுரவிப்பு: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, 2.5 ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக கட்டி முடிக்க, உதவிய கட்டடத் தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், பிரதமர் மோடி, அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி, கலந்துரையாடி மகிழ்ந்தார்.

டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், பல குழு அறைகள், சாப்பாட்டுப் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள கார்பெட்கள், உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூரில் இருந்தும், மூங்கில் தரை விரிப்புகள் திரிபுராவில் இருந்தும், கல் வேலைப்பாடுகள் ராஜஸ்தானிலிருந்தும் பெறப்பட்டு உள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக, இது அமைந்து உள்ளது.

புதிய கட்டடத்தின உட்புறம், தாமரை, மயில், ஆலமரம் உள்ளிட்டவைகளை தீம் ஆகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. 64,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில், 4 மாடி கட்டடமாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Central Vista: புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டாவில் ஒரு விசிட்!

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் இருக்கை அருகே 'செங்கோல்' வைத்து மரியாதை செய்த பிரதமர் மோடி

டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று (மே 28) பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்காக காலையிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் காந்தியின் உருவச் சிலைக்கு மலர் தூவினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை, தமிழ்நாட்டு ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

பிரதமர் மோடி, செங்கோலின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் . ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை வாங்கி, நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே அதை நிறுவினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர், ஜிதேந்திர சிங், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே,பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து மத பிரார்த்தனைகள் நடந்தது. அப்போது இந்து, கிறித்தவம், இஸ்லாம், சீக்கியம் உள்ளிட்ட 12 மதங்களின் தலைவர்கள், தாங்கள் வழிபடும் கடவுள்களை நினைத்து, அவரவர்கள் வழக்கப்படி, சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இந்த விழாவில் தேவார பாடல்கள் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டட தொழிலாளர்கள் கவுரவிப்பு: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, 2.5 ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக கட்டி முடிக்க, உதவிய கட்டடத் தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், பிரதமர் மோடி, அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி, கலந்துரையாடி மகிழ்ந்தார்.

டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், பல குழு அறைகள், சாப்பாட்டுப் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள கார்பெட்கள், உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூரில் இருந்தும், மூங்கில் தரை விரிப்புகள் திரிபுராவில் இருந்தும், கல் வேலைப்பாடுகள் ராஜஸ்தானிலிருந்தும் பெறப்பட்டு உள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக, இது அமைந்து உள்ளது.

புதிய கட்டடத்தின உட்புறம், தாமரை, மயில், ஆலமரம் உள்ளிட்டவைகளை தீம் ஆகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. 64,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில், 4 மாடி கட்டடமாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Central Vista: புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டாவில் ஒரு விசிட்!

Last Updated : May 28, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.