மத்தியப் பிரதேசம் மாநிலம் விதிஷா பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து கரோனாவால் உயிரிழந்தவரின் உடல்களை ஏற்றிக்கொண்டு, மயானத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது, ஆம்புலன்ஸின் பக்கவாட்டு கதவு திடீரென உடைந்து கொண்டு உடல் ஒன்று சாலையில் கீழே விழுந்தது.
இதைப் பார்த்த மக்கள், அதிர்ச்சி அடைந்தனர். மக்கள் கூச்சலிட, உடனடியாக ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு ஓட்டுநர் வந்துள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பகிரும் பலர், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்திற்கு, கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மே மாத மத்தியில் இரண்டாம் அலை உச்சம் தொடும்