டெல்லி: உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 10ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையடுத்து பிப்ரவரி 14, பிப்ரவரி 20, பிப்ரவரி 23ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த கட்டமாக பிப்ரவரி 27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய நாள்களில் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதியும், மார்ச் 3ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்து மாநிலங்களிலும் சட்ட விரோதமாக எடுத்து செல்லப்பட்ட ரூ.1,018 கோடி மதிப்பிலான மதுபானங்கள், பரிசுபொருள்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 510 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்களும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 307 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருள்கள், மதுபாட்டிகள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் விதிமீறல்: ரூ.9 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல்