முசாபர்பூர்: பிகார் மாநிலம், முசாபர்பூரில் 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தோழிகளுடன் தூர்கா பூஜைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். சிறுமியை வனப்பகுதிக்கு கடத்திச் சென்று, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சிறுமியின் தோழிகள் அவரது தந்தையிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது சிறுமி சுயநினைவு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து அவர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதை பார்த்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூடுதல் தலைமை ஆசிரியர் கைது