ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் டிச.31ஆம் தேதி இரவு காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அஜோட் கிராமம் அருகே சுற்றித்திரிந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பாகிஸ்தான் அக்கிரமித்துள்ள போக் பகுதியைச் சேர்ந்த அலி ஹைதர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, எல்லை மீறி இந்தியாவிற்குள் வந்ததற்காக காவல் துறையினர் சிறுவனை கைது செய்தனர்.
பின்னர், சிறுவனிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்தது தெரியவந்தது. அவர் மீது சந்தேகத்திற்குரிய எவ்வித ஆதாரமும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இது குறித்து பாகிஸ்தான் அலுவலர்களுடன் ஆலோசித்த பிறகே சிறுவன் திருப்பி அனுப்பபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல் துறை, ராணுவ வீரர்களுக்கு ஹைதர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளைஞர்களை ஆயுத கலாச்சாரத்துக்கு தூண்டுகிறதா அரசு - உமர் அப்துல்லா