ஐஐஎம்சி பாதுகாப்புப் பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான குறுகிய கால பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழாவில், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கலந்துக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிசெய்வது ஊடக நபர்கள் உட்பட நம் அனைவரின் பொறுப்பாகும். கிட்டத்தட்ட அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கும்போது, ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதனை, ஊடக கல்வியறிவு மூலம் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். தற்போது, இந்த ஊடக கல்வி ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல சமூகத்தில் உள்ள அணைவரும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது, போலி செய்திகளும், ஒருவரை குறிவைத்து வெளிவரும் வெறுப்புச் செய்திகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.
ஐ.ஐ.எம்.சி ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்கிறது. இதில், கேப்டன் கிரேட் முதல் ஒரு பிரிகேடியர் வரையிலான அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கரோனா தொற்றின் காரணமாக, இந்தாண்டு முதல் முறையாக ஆன்லைனில் பயிற்சி திட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.