ETV Bharat / bharat

38 பேர் சென்ற டாடா ஏஸ் வாகனம் லாரி மீது மோதல் - 7 பேர் பலி

author img

By

Published : May 30, 2022, 10:43 AM IST

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LORRY COLLIDES WITH MINIVAN IN ANDHRA
LORRY COLLIDES WITH MINIVAN IN ANDHRA

அமராவதி: ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு, காயமடைந்தோரை நரசராவ்பேட்டையில் உள்ள குரஜாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஸ்ரீசைலத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து அவர்களின் சொந்த கிராமமான ரெண்டசிந்தலாவின் எல்லையில் நேற்று (மே 29) நள்ளிரவில் நிகழ்ந்துள்ளது. டாடா ஏஸ் வாகனத்தில் இருந்தவர்கள் ரெண்டசிந்தலா பீசி காலனியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனத்தில், அவர்கள் மொத்தம் 38 பேர் பயணித்துள்ளனர். ரெண்டசிந்தலாவின் புறநகர் பகுதியில் டாடா ஏஸ் வந்தபோது, உள்ளூர் மின் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில், அந்த வாகனம் கவிழந்து அதில் இருந்தவர்கள் சாலையில் தூக்கியெறியப்பட்டனர்.

இதில், நால்வர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இருவர் மருத்துவமனையில் என 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் ஏழு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பத்து பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களுள் மூவர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மேடையில் மயங்கி விழுந்த பாடகர்- உயிரிழப்பு!

அமராவதி: ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு, காயமடைந்தோரை நரசராவ்பேட்டையில் உள்ள குரஜாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஸ்ரீசைலத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து அவர்களின் சொந்த கிராமமான ரெண்டசிந்தலாவின் எல்லையில் நேற்று (மே 29) நள்ளிரவில் நிகழ்ந்துள்ளது. டாடா ஏஸ் வாகனத்தில் இருந்தவர்கள் ரெண்டசிந்தலா பீசி காலனியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனத்தில், அவர்கள் மொத்தம் 38 பேர் பயணித்துள்ளனர். ரெண்டசிந்தலாவின் புறநகர் பகுதியில் டாடா ஏஸ் வந்தபோது, உள்ளூர் மின் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில், அந்த வாகனம் கவிழந்து அதில் இருந்தவர்கள் சாலையில் தூக்கியெறியப்பட்டனர்.

இதில், நால்வர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இருவர் மருத்துவமனையில் என 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் ஏழு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பத்து பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களுள் மூவர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மேடையில் மயங்கி விழுந்த பாடகர்- உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.