எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும், அதன் பாதுகாப்பை சிறிய அளவிலான பூட்டுதான் உறுதி செய்கிறது. ஒரு இடத்தில் புதிதாக குடியேறுபவர்கள் முதற்கொண்டு புதிய வீட்டைக் கட்டுபவர்வரை வீட்டின் தாழ்ப்பாள்களுக்கும், பூட்டுக்கும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் பழம் பெரும் பூட்டுத் தொழிலாளி ஒருவர் சுமார் 300 கிராம் எடையுள்ள பூட்டை உருவாக்கியுள்ளார். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் இந்த ராட்சத பூட்டு, ஒரு வயதான தம்பதியால் உருவாக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அது தான்.
அலிகாரில் அமைந்துள்ள ஜ்வாலபுரி பகுதியில் வசிக்கும் சத்ய பிரகாஷ் சர்மா, அவரது மனைவி ருக்மணி சர்மா இணைந்து இந்தப் பூட்டை வடிவமைத்துள்ளனர். கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தப் பூட்டு செய்வதற்கான ஆர்டர் இத்தம்பதியினருக்கு கிடைத்துள்ளது.
பூட்டு குறித்த சுவாரசியத் தகவல்கள்
- அகலம் - 6 அடி
- உயரம் - 2 அடி 9 அங்குலம்
- எடை - 300 கிலோகிராம்
- பூட்டின் சாவி - 3 அடி நான்கு அங்குலம்
- சாவியின் எடை - 25 கிலோ.
இதில் இன்னும் பல மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளதால், இதன் எடை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பூட்டை உருவாக்கிய சத்யப்பிரகாஷ் தெரிவித்துள்ளார். அந்த மாற்றங்களை செய்தால் அதன் எடை சுமார் 350 கிலோ அதிகரிக்கும். கிட்டத்தட்ட ஓராண்டு உழைப்பிற்கு பின்னர் இந்த பிரமாண்ட பூட்டை இத்தம்பதியினர் உருவாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க:வயதானவர்களுக்கு கல்வி போதிக்கும் தன்னார்வக் குழு!