ETV Bharat / bharat

சிறுவன் விழுங்கிய டிவி ரிமோட் பேட்டரியை அகற்றி உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!

author img

By

Published : Dec 19, 2022, 1:47 PM IST

திருவனந்தபுரத்தில் இரண்டு வயது சிறுவனின் வயிற்றில் சிக்கிய டிவி ரிமோட் பேட்டரியை எண்டோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

Kerala
Kerala

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ்(2) என்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக டிவி ரிமோட்டில் இருந்த பேட்டரியை விழுங்கியதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டனர். எண்டோஸ்கோபி மூலம் சிறுவனின் வயிற்றில் இருந்த பேட்டரியை அகற்றி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர்.

இதுகுறித்து இரப்பை, குடல் மருத்துவ நிபுணர் ஜெயக்குமார் கூறும்போது, "சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே நாங்கள் சிகிச்சை ஆரம்பித்தோம். சரியான நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால், எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் இருந்த பேட்டரியை அகற்ற முடிந்தது. சுமார் 20 நிமிடங்களில் பேட்டரி அகற்றப்பட்டது. பேட்டரி குடலில் சிக்கி இருந்ததால் எளிதாக நீக்க முடிந்தது, வேறு பகுதிக்கு சென்றிருந்தால் அகற்றுவது சிரமமாகியிருக்கும். சிறுவனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: டெல்லியில் சாலையோரம் கிடந்த மர்மபொருளால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ்(2) என்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக டிவி ரிமோட்டில் இருந்த பேட்டரியை விழுங்கியதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டனர். எண்டோஸ்கோபி மூலம் சிறுவனின் வயிற்றில் இருந்த பேட்டரியை அகற்றி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர்.

இதுகுறித்து இரப்பை, குடல் மருத்துவ நிபுணர் ஜெயக்குமார் கூறும்போது, "சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே நாங்கள் சிகிச்சை ஆரம்பித்தோம். சரியான நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால், எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் இருந்த பேட்டரியை அகற்ற முடிந்தது. சுமார் 20 நிமிடங்களில் பேட்டரி அகற்றப்பட்டது. பேட்டரி குடலில் சிக்கி இருந்ததால் எளிதாக நீக்க முடிந்தது, வேறு பகுதிக்கு சென்றிருந்தால் அகற்றுவது சிரமமாகியிருக்கும். சிறுவனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: டெல்லியில் சாலையோரம் கிடந்த மர்மபொருளால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.