பெங்களூரு (கர்நாடகா): உத்தரப் பிரதேசம், காசியாபாத்தில் உள்ள லோனி என்ற பகுதியைச் சேர்ந்த சஃபி அப்துல் சமத் எனும் முதியவர், தன்னை ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து ’ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூறச் சொல்லி தாக்கியதாகக் கூறி அழும்படியான வீடியோ ஒன்றை, கடந்த 5ஆம் தேதி ட்விட்டரில் பகிர்ந்தார். இந்த வீடியோ பெரும் விவாதங்களை எழுப்பியது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இச்சம்பவம் உண்மைக்கு புறப்பானது எனத் தெரிய வந்ததையடுத்து, இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம், செய்தித்தளமான தி வயர், பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர், ராணா அய்யூப் ஆகியோர் மீது கடந்த ஜூன் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.