ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது

author img

By

Published : Nov 7, 2022, 7:59 PM IST

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்ட ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட ஹைப்ரீட் பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட ஹைப்ரீட் பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த மாதம் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்ட இரண்டு ஹைபிரிட் பயங்கரவாதிகள் பாரமுல்லாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ரிமோட் கண்ட்ரோல்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்களும் (IED - Improvised explosive device) காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறையினர், "கெனுசா பந்திபோராவில் சமீபத்தில் நடந்த IED குண்டுவெடிப்பு சம்பவத்தை சோபோர் காவல் துறையினர் முறியடித்துள்ளனர். கெனுசா பந்திபோராவை சேர்ந்த இர்ஷாத் கனே எனும் ஷாஹித் மற்றும் வசீம் ராஜா ஆகிய 2 ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து டெட்டனேட்டர்களுடன் கூடிய 2 ரிமோட் கண்ட்ரோல் IEDகள் மீட்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது" எனத்தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அக்டோபர் 15 அன்று காஷ்மீரின் வடக்குப்பகுதியின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள கெனுசா-அஸ்டாங்கோ பகுதியில் சுமார் 18 கிலோ எடையுள்ள மற்றும் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட IEDஐ பயங்கரவாதிகள் நிறுவினர். ஆனால், அந்த வெடிகுண்டு பாதுகாப்புப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: 4ஆவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் தந்தை எடுத்த விபரீத முடிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த மாதம் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்ட இரண்டு ஹைபிரிட் பயங்கரவாதிகள் பாரமுல்லாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ரிமோட் கண்ட்ரோல்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்களும் (IED - Improvised explosive device) காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறையினர், "கெனுசா பந்திபோராவில் சமீபத்தில் நடந்த IED குண்டுவெடிப்பு சம்பவத்தை சோபோர் காவல் துறையினர் முறியடித்துள்ளனர். கெனுசா பந்திபோராவை சேர்ந்த இர்ஷாத் கனே எனும் ஷாஹித் மற்றும் வசீம் ராஜா ஆகிய 2 ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து டெட்டனேட்டர்களுடன் கூடிய 2 ரிமோட் கண்ட்ரோல் IEDகள் மீட்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது" எனத்தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அக்டோபர் 15 அன்று காஷ்மீரின் வடக்குப்பகுதியின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள கெனுசா-அஸ்டாங்கோ பகுதியில் சுமார் 18 கிலோ எடையுள்ள மற்றும் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட IEDஐ பயங்கரவாதிகள் நிறுவினர். ஆனால், அந்த வெடிகுண்டு பாதுகாப்புப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: 4ஆவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் தந்தை எடுத்த விபரீத முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.