ETV Bharat / bharat

சாலை வசதி இல்லாத வாக்குச் சாவடி ... தேர்தல் அலுவலர்கள் 20 கி.மீ நடந்து செல்லும் நிலை...!

author img

By

Published : Nov 1, 2022, 12:44 PM IST

ஹிமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி, குல்லு மாவட்டத்தில் போதிய சாலை வசதி இல்லாத 3 வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல தேர்தல் அலுவலர்கள் சுமார் 20 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

Himachal
Himachal

குல்லு: ஹிமாச்சல பிரதேசத்தில் வரும் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடிகளை அமைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குல்லு மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாமல், அணுகுவதற்கு கடினமாக உள்ள மூன்று வாக்குச் சாவடிகளை சென்றடைய அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

பஞ்சார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்தி, டார்ஷன் ஆகிய இரண்டு இடங்களில் 98 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக வாக்கு மையம் அமைக்கப்படவுள்ளது. வாக்குச்சாவடிகளை அமைக்க, தேர்தல் ஊழியர்கள் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதியில் சாலை வசதியும், இணைய வசதியும் கூட இல்லை என கூறப்படுகிறது. அதேபோல் மணிகர்ணா பள்ளத்தாக்கில் உள்ள ரஷோல் வாக்குச் சாவடியும் அணுக முடியாத பகுதியில் அமைந்துள்ளது.

இதுகுறித்து பஞ்சார் சப் டிவிஷன் அதிகாரி பிரகாஷ் சந்த் ஆசாத் கூறுகையில், "மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்த, இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அலுவலர்கள் புறப்பட்டுச் செல்வார்கள். குலு மாவட்டத்தில் மொத்தமுள்ள 35 வாக்குச் சாவடிகளில், 3 வாக்கு மையங்களுக்கு செல்ல, ஊழியர்கள் 5 கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டியுள்ளது. 9 வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல சுமார் 7 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாட்டின் முதல் வாக்காளரான ஷியாம் ஹிமாச்சல் எலெக்‌ஷனில் நேரில் சென்று வாக்களிக்க முடிவு!

குல்லு: ஹிமாச்சல பிரதேசத்தில் வரும் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடிகளை அமைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குல்லு மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாமல், அணுகுவதற்கு கடினமாக உள்ள மூன்று வாக்குச் சாவடிகளை சென்றடைய அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

பஞ்சார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்தி, டார்ஷன் ஆகிய இரண்டு இடங்களில் 98 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக வாக்கு மையம் அமைக்கப்படவுள்ளது. வாக்குச்சாவடிகளை அமைக்க, தேர்தல் ஊழியர்கள் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதியில் சாலை வசதியும், இணைய வசதியும் கூட இல்லை என கூறப்படுகிறது. அதேபோல் மணிகர்ணா பள்ளத்தாக்கில் உள்ள ரஷோல் வாக்குச் சாவடியும் அணுக முடியாத பகுதியில் அமைந்துள்ளது.

இதுகுறித்து பஞ்சார் சப் டிவிஷன் அதிகாரி பிரகாஷ் சந்த் ஆசாத் கூறுகையில், "மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்த, இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அலுவலர்கள் புறப்பட்டுச் செல்வார்கள். குலு மாவட்டத்தில் மொத்தமுள்ள 35 வாக்குச் சாவடிகளில், 3 வாக்கு மையங்களுக்கு செல்ல, ஊழியர்கள் 5 கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டியுள்ளது. 9 வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல சுமார் 7 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாட்டின் முதல் வாக்காளரான ஷியாம் ஹிமாச்சல் எலெக்‌ஷனில் நேரில் சென்று வாக்களிக்க முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.