கர்நாடக மாநிலம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் பயணியை சோதித்தப்போது, அவர் தனது உள்ளாடையில் 39.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 851 கிராம் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், அவரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் கேரளாவின் காசராகோடு மாவட்டம், சேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் அந்தப் பெண் துபாயில் இருந்து மங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தற்போது சுங்க அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மும்பை நடனக் கலைஞர் பெங்களூரில் கொலை