ETV Bharat / bharat

பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: நகைக்கடையில் புகுந்த வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகள்!

author img

By

Published : May 23, 2023, 4:53 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மழைநீர் நகைக் கடைக்குள் புகுந்ததில், கடையில் இருந்த தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Shocking
மழைநீர்
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகள்

கர்நாடகா: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூரு, ஹாசன், ஷிவமோகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி மாலை பெங்களூருவில் பெருமழை கொட்டித் தீர்த்தது. குட்டஹள்ளி, கொட்டிகேபாளையா, புலிகேசி நகர், மஹாலட்சுமி லேஅவுட் உள்ளிட்டப் பகுதிகளில் அதிகளவு மழை பெய்தது. குறிப்பாக குட்டஹள்ளியில் 6.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

இந்த கனமழையால் மொத்த நகரமும் வெள்ளக்காடாய் மாறின. சாலைகள், சுரங்க நடைபாதைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை எட்டு பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. பெங்களூருவில் நேற்றும் கனமழை பெய்தது.

இந்த வெள்ளம் காரணமாக பெங்களூரு நகரம் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளன. சாலைகள் மற்றும் பொது இடங்களில் கழிவுகள் சேர்ந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. குப்பைகள், கழிவுகள், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நகைக் கடையில் புகுந்த வெள்ளம்: இந்த நிலையில், பெங்களூருவில் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் வெள்ளம் புகுந்ததில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நகைக் கடை தாழ்வான பகுதியில் இருந்ததால், வெள்ளநீர் வரும்போது ஊழியர்கள் கடையை மூட முயற்சித்தும் முடியவில்லை எனத் தெரிகிறது. மழைநீருடன் குப்பைகளும் சேர்ந்து கடைக்குள் புகுந்தது. இந்த வெள்ளத்தில் ஏராளமான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து கடையின் உரிமையாளர் பிரியாவிடம் கேட்டபோது, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த மழை வெள்ளத்தில் கடையில் இருந்த 80 சதவீத நகைகளை இழந்துவிட்டதாகவும், மீதமுள்ள நகைகள் எல்லாம் ஈரமாக உள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் ஊழியர்களின் உதவியுடன் சேதமடைந்த கடை வளாகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மாநகராட்சி ஊழியர்களை உதவிக்கு அழைத்தும் அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

மழை தொடரும்: இதனிடையே கர்நாடகாவில் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்குச் சுழற்சி காரணமாக, கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: UP: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி, பலர் மாயம்!

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகள்

கர்நாடகா: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூரு, ஹாசன், ஷிவமோகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி மாலை பெங்களூருவில் பெருமழை கொட்டித் தீர்த்தது. குட்டஹள்ளி, கொட்டிகேபாளையா, புலிகேசி நகர், மஹாலட்சுமி லேஅவுட் உள்ளிட்டப் பகுதிகளில் அதிகளவு மழை பெய்தது. குறிப்பாக குட்டஹள்ளியில் 6.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

இந்த கனமழையால் மொத்த நகரமும் வெள்ளக்காடாய் மாறின. சாலைகள், சுரங்க நடைபாதைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை எட்டு பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. பெங்களூருவில் நேற்றும் கனமழை பெய்தது.

இந்த வெள்ளம் காரணமாக பெங்களூரு நகரம் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளன. சாலைகள் மற்றும் பொது இடங்களில் கழிவுகள் சேர்ந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. குப்பைகள், கழிவுகள், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நகைக் கடையில் புகுந்த வெள்ளம்: இந்த நிலையில், பெங்களூருவில் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் வெள்ளம் புகுந்ததில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நகைக் கடை தாழ்வான பகுதியில் இருந்ததால், வெள்ளநீர் வரும்போது ஊழியர்கள் கடையை மூட முயற்சித்தும் முடியவில்லை எனத் தெரிகிறது. மழைநீருடன் குப்பைகளும் சேர்ந்து கடைக்குள் புகுந்தது. இந்த வெள்ளத்தில் ஏராளமான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து கடையின் உரிமையாளர் பிரியாவிடம் கேட்டபோது, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த மழை வெள்ளத்தில் கடையில் இருந்த 80 சதவீத நகைகளை இழந்துவிட்டதாகவும், மீதமுள்ள நகைகள் எல்லாம் ஈரமாக உள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் ஊழியர்களின் உதவியுடன் சேதமடைந்த கடை வளாகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மாநகராட்சி ஊழியர்களை உதவிக்கு அழைத்தும் அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

மழை தொடரும்: இதனிடையே கர்நாடகாவில் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்குச் சுழற்சி காரணமாக, கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: UP: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி, பலர் மாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.