ETV Bharat / bharat

ஏரியில் தத்தளித்த சகோதரிகள் மீட்பு.. துரிதமாக செயல்பட்ட அரசுப்பேருந்து ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

author img

By

Published : Jan 30, 2023, 10:51 PM IST

கர்நாடகாவில் ஏரியில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய இரு சகோதரிகளை துரிதமாக செயல்பட்டு மீட்ட அரசுப்பேருந்து ஓட்டுநரை பல்வேறு தரப்பில் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அரசு பேருந்து ஓட்டுநர்
அரசு பேருந்து ஓட்டுநர்

சிரா: கர்நாடகா மாநிலம், தும்கூரு மாவட்டம், சிராவில் ஏரியில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய இரு சகோதரிகளை அரசுப் பேருந்து ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு மீட்டார். நாஹேனஹள்ளியில் இருந்து சிரா நோக்கி கர்நாடக மாநில அரசுப்பேருந்தை ஓட்டுநர் மஞ்சுநாத் செலுத்தியுள்ளார்.

நண்பகல் வேளையில் அக்ரஹாரா ஏரியின் அருகே பேருந்து சென்று கொண்டு இருந்தபோது, ஏரியில் இரு பெண்கள் தத்தளித்து கொண்டு இருந்ததை மஞ்சுநாத் பார்த்துள்ளார். உடனடியாக பேருந்தை நிறுத்திய மஞ்சுநாத், துரிதமாக செயல்பட்டு சகோதரிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பேருந்து பயணிகள் உதவியுடன் ஏரியில் தத்தளித்த இரு சகோதரிகளை மஞ்சுநாத் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு சகோதரிகளும் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், துணி துவைப்பதற்காக ஏரிக்கு வந்தபோது இருவரும் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் தத்தளித்த இரு சகோதரிகளை மஞ்சுநாத் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் உயரதிகாரிகள் உள்பட பலர் மஞ்சுநாத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதானி நிறுவனங்களில் ரூ.15,400 கோடி முதலீடு.. அபுதாபி முதலீட்டு நிறுவனம் திட்டம்!

சிரா: கர்நாடகா மாநிலம், தும்கூரு மாவட்டம், சிராவில் ஏரியில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய இரு சகோதரிகளை அரசுப் பேருந்து ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு மீட்டார். நாஹேனஹள்ளியில் இருந்து சிரா நோக்கி கர்நாடக மாநில அரசுப்பேருந்தை ஓட்டுநர் மஞ்சுநாத் செலுத்தியுள்ளார்.

நண்பகல் வேளையில் அக்ரஹாரா ஏரியின் அருகே பேருந்து சென்று கொண்டு இருந்தபோது, ஏரியில் இரு பெண்கள் தத்தளித்து கொண்டு இருந்ததை மஞ்சுநாத் பார்த்துள்ளார். உடனடியாக பேருந்தை நிறுத்திய மஞ்சுநாத், துரிதமாக செயல்பட்டு சகோதரிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பேருந்து பயணிகள் உதவியுடன் ஏரியில் தத்தளித்த இரு சகோதரிகளை மஞ்சுநாத் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு சகோதரிகளும் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், துணி துவைப்பதற்காக ஏரிக்கு வந்தபோது இருவரும் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் தத்தளித்த இரு சகோதரிகளை மஞ்சுநாத் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் உயரதிகாரிகள் உள்பட பலர் மஞ்சுநாத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதானி நிறுவனங்களில் ரூ.15,400 கோடி முதலீடு.. அபுதாபி முதலீட்டு நிறுவனம் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.