பஞ்சாப் தேசிய வங்கி உட்பட பல வங்கிகளில் ரூ.13,500 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக வைர வியாபாரி மெஹுல் சோக்சி மீது குற்றம்சாட்டு உள்ளது. இவர் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றார்.
இவரை இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மே 23ஆம் தேதி ஆன்டிகுவா நாட்டிலிருந்து மெஹுல் சோக்சி மாயமான நிலையில், அங்கிருந்து தப்ப முயற்சித்ததாகக் கூறி ஆன்டிகுவா காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது.
தனக்கு உடல் நிலை குறைவு உள்ளதாகக் கூறி பிணை கேட்டு ஆன்டிகுவா நீதிமன்றத்தில் மெஹுல் சோக்சி மனுத்தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் மெஹுல் சோக்சி ஆன்டிகுவா குடிமகன் அல்ல, எனவே நிலையான முகவரி இல்லாத மெஹுலுக்கு பிணை வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க: பூஞ்சை, கரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி-இல் இருந்து விலக்கு